மேலும் அறிய

Kolkata Doctor Case:இதைப் படிங்க! தமிழ்நாட்டிலும் நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக் - வலுக்கும் போராட்டம்

Kolkata Doctor Case: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து (நாளை) ஆகஸ்ட் 17-ம் தேதி  நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. நாடு தழுவிய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

பெண் பயிற்சி மருத்துவர் கொலை:

கொல்கத்தாவில் உள்ள பிரபல ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (17.08.2024) நடைபெறுகிறது. ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு:

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொலைக்கு நியாயம் கேட்டு நாளை நடைபெறும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின்(TNGDA) மாநில செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில்  இந்த கொடூரமான கொலை குறித்தும் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்  இந்திய மருத்துவக் கழக (IMA) மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள்,  பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஆகியோர்களை சேர்த்து ஒன்றாக போராட முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டத்தில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் பற்றிய விவரம்:

  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும்.
  • தேசிய மருத்துவர் மட்டும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். 
  • தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் தங்குமிடம் போதிய வசதிகளும் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. இதோடு சேர்ந்து பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்குமிடங்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் இல்லை, பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது.
  • எனவே தமிழக அரசிடம் அரசு மருத்துவர்களுக்கும், (Medical College Hospitals, Govt Hospitals, PHCs ஆகியவற்றில் பணி புரிபவர்கள்) மேலும் பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளில் உரிய வேலை ஷிப்ட், தங்கும் இடம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Embed widget