மேலும் அறிய

Kolkata Doctor Case:இதைப் படிங்க! தமிழ்நாட்டிலும் நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக் - வலுக்கும் போராட்டம்

Kolkata Doctor Case: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து (நாளை) ஆகஸ்ட் 17-ம் தேதி  நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. நாடு தழுவிய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

பெண் பயிற்சி மருத்துவர் கொலை:

கொல்கத்தாவில் உள்ள பிரபல ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (17.08.2024) நடைபெறுகிறது. ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு:

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொலைக்கு நியாயம் கேட்டு நாளை நடைபெறும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின்(TNGDA) மாநில செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில்  இந்த கொடூரமான கொலை குறித்தும் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்  இந்திய மருத்துவக் கழக (IMA) மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள்,  பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஆகியோர்களை சேர்த்து ஒன்றாக போராட முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டத்தில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் பற்றிய விவரம்:

  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும்.
  • தேசிய மருத்துவர் மட்டும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். 
  • தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் தங்குமிடம் போதிய வசதிகளும் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. இதோடு சேர்ந்து பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்குமிடங்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் இல்லை, பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது.
  • எனவே தமிழக அரசிடம் அரசு மருத்துவர்களுக்கும், (Medical College Hospitals, Govt Hospitals, PHCs ஆகியவற்றில் பணி புரிபவர்கள்) மேலும் பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளில் உரிய வேலை ஷிப்ட், தங்கும் இடம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
Aadhaar Updates: வந்தது ஆதார் அப்டேட் - எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் - இனி கட்டாயமும், கட்டணமும்
Aadhaar Updates: வந்தது ஆதார் அப்டேட் - எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் - இனி கட்டாயமும், கட்டணமும்
Embed widget