மேலும் அறிய

காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

ஓசூர் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி தொடர்ச்சியாக 3 விவசாயிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் சிகரனாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, நேரலகிரி, எப்ரி, சிங்கிரிப்பள்ளி, சிகரலப்பள்ளி பகுதியில் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று  இரவு கர்நாடக மாநிலம் பாடப்பட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு காட்டு யானை இரவு தமிழக வனப்பகுதிக்குள் எப்ரி வழியாக வந்துள்ளது. இந்த யானை சிகரலப்பள்ளி கிராமத்தில் தக்காளி தோட்டத்துக்கு வந்தது. அங்கு காவலில் இருந்த விவசாயி சந்திரசேகரன் வயது (32) என்பவர் யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து ஓடினார். ஆனால் யானை அவரை ஓட ஓட விரட்டி சென்று காலால் மிதித்து கொன்றது.

 

 


காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

இதைத்தொடர்ந்து அந்த யானை அருகே உள்ள நேரலகிரி கிராமத்திற்கு சென்று அங்கு நிலக்கடலைக்கு இரவு காவலில் இருந்த விவசாயி நாகராஜ் வயது (56) என்பவரையும் தாக்கி கொன்றது.  கெலமங்கலம்  அருகே பச்சப்பனட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷப்பா (65) இன்று காலை ஒற்றை ஆண் யானை தாக்கி உயிரிழந்தார்.
கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டி  கிராமத்தைச் சேர்ந்த  வெங்கடேஷ்  என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காலை சுமார் 5 மணி அளவில் கிராமத்தின் அருகில் உள்ள  ஏரிகரையிக்கு செல்லும் சாலை வழியே சென்று கொண்டிருந்த போது  அந்த வழியாக வந்த ஒற்றை யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அந்த காட்டுயானை அருகே உள்ள கரியனப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. காலையில் சந்திரசேகரன், நாகராஜ் , வெங்கடேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்ற போது யானை தாக்கி 2 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிகரலப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர். சந்திரசேகரனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் அவர்களை தடுத்தனர். 


காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் வனச்சரகர் மகேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை உடனடியாக விரட்ட வேண்டும். சந்திரசேகரனின் குடும்பத்திற்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

மேலும் முதல் கட்டமாக அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வனச்சரகர் மகேந்திரன் வழங்கினார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரனின் உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி 3 விவசாயிகள் பலியான சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேப்பனப்பள்ளி பகுதிகளில் காட்டு யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதியை ஒட்டி செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget