மேலும் அறிய

காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

ஓசூர் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி தொடர்ச்சியாக 3 விவசாயிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் சிகரனாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, நேரலகிரி, எப்ரி, சிங்கிரிப்பள்ளி, சிகரலப்பள்ளி பகுதியில் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று  இரவு கர்நாடக மாநிலம் பாடப்பட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு காட்டு யானை இரவு தமிழக வனப்பகுதிக்குள் எப்ரி வழியாக வந்துள்ளது. இந்த யானை சிகரலப்பள்ளி கிராமத்தில் தக்காளி தோட்டத்துக்கு வந்தது. அங்கு காவலில் இருந்த விவசாயி சந்திரசேகரன் வயது (32) என்பவர் யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து ஓடினார். ஆனால் யானை அவரை ஓட ஓட விரட்டி சென்று காலால் மிதித்து கொன்றது.

 

 


காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

இதைத்தொடர்ந்து அந்த யானை அருகே உள்ள நேரலகிரி கிராமத்திற்கு சென்று அங்கு நிலக்கடலைக்கு இரவு காவலில் இருந்த விவசாயி நாகராஜ் வயது (56) என்பவரையும் தாக்கி கொன்றது.  கெலமங்கலம்  அருகே பச்சப்பனட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷப்பா (65) இன்று காலை ஒற்றை ஆண் யானை தாக்கி உயிரிழந்தார்.
கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டி  கிராமத்தைச் சேர்ந்த  வெங்கடேஷ்  என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காலை சுமார் 5 மணி அளவில் கிராமத்தின் அருகில் உள்ள  ஏரிகரையிக்கு செல்லும் சாலை வழியே சென்று கொண்டிருந்த போது  அந்த வழியாக வந்த ஒற்றை யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அந்த காட்டுயானை அருகே உள்ள கரியனப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. காலையில் சந்திரசேகரன், நாகராஜ் , வெங்கடேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்ற போது யானை தாக்கி 2 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிகரலப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர். சந்திரசேகரனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் அவர்களை தடுத்தனர். 


காட்டு யானை தாக்கி தொடர்சியாக 3 விவசாயிகள் பலி.. தொடரும் சோகம்!

 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் வனச்சரகர் மகேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை உடனடியாக விரட்ட வேண்டும். சந்திரசேகரனின் குடும்பத்திற்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

மேலும் முதல் கட்டமாக அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வனச்சரகர் மகேந்திரன் வழங்கினார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரனின் உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி 3 விவசாயிகள் பலியான சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேப்பனப்பள்ளி பகுதிகளில் காட்டு யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதியை ஒட்டி செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget