![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து நின்றது
அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 330 கான அடியும், புதிய பாசன வாய்க்காலில், 440 காண அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
![கரூர் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து நின்றது Karur Water stopped coming to Periya Andal temple barrage TNN கரூர் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து நின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/cd9de4f28e6f80d88fe9a3dd92b13c751677136219146183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமராவதி ஆற்றில், கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. இதனால், தடுப்பணை பகுதியில் பாறை கற்கள் வெளியே தெரிகின்றன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 330 கனஅடியும், புதிய பாசன வாய்க்காலில், 440 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும், கரூர் அருகே பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு வந்த, தண்ணீர் வரத்து நின்றது. இதனால் தடுப்பணை பகுதிகளில் பாறைகள் வெளியே தெரிகின்றன. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 69.45 அடியாக இருந்தது.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு காலை வினாடிக்கு 1,907 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,588 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது.
க.பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 15.18 அடியாக இருந்தது. இதனால், நொய்யல் பாசன வாய்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)