மேலும் அறிய

தெரு நாய் கடியில் அதிகம் பாதிக்கும் குழந்தைகள்....கரூரில் அதிகரித்த தெரு நாய்கள்..!

நாய் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளை முறையாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். கடுமையான நாய் கடியால் ரேபிஸ் என்ற வைரஸ் மனித உடம்பில் தாக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு தெருவிலும் நாய்களின் ராஜ்ஜியம் நடக்கிறது. சில தெருக்களில் சிங்கங்கள் போல கர்ஜித்து கொண்டிருக்கும் போது சாதாரண நாய் எது? வெறி நாய் எது என்று கணிக்க முடியாத படி இருக்கும். நாம் அதை தீண்டாத வரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறிநாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறிநாய்கள் கடித்து இறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். அதில் 50 சதவீதத்தினர் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான்.


தெரு நாய் கடியில் அதிகம் பாதிக்கும் குழந்தைகள்....கரூரில் அதிகரித்த தெரு நாய்கள்..!
   

தடுப்பூசி போதுமானது:

நாய் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அழிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். கடுமையான நாய் கடியால் ரேபிஸ் என்ற வைரஸ் மனித உடம்பில் தாக்கும். ரேபிஸ் என்பது மூளையை தாக்கும் ஒரு நோயாகும். முதலில் தசை செல்களில் பழகி பெருகும். கிருமிகள் பிறகு நரம்பு செல்களை வேகமாக தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக, நாய் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு கால்நடை மருத்துவர்கள் போடும் மூன்று ஊசிகள் மட்டும் போதுமானது. விலங்கு கடித்த பின் 5% கண்டிப்பாக போட வேண்டும். வெறும் தோலை கடித்து இருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்த தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்.


தெரு நாய் கடியில் அதிகம் பாதிக்கும் குழந்தைகள்....கரூரில் அதிகரித்த தெரு நாய்கள்..!
   

தெரு நாய் தொல்லை:

நாய் ஒருவரை கடித்தவுடன் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதலுதவி செய்து கொள்ள வேண்டும் அல்லது நாய்கடியின் விஷத்தன்மை நமது உடலில் மேலும் பரவாமல் இருக்க உடனடியாக தடுப்புச் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கடித்த நாய் வீட்டு நாயா அல்லது தெரு நாயா அல்லது வெறிநாயா என மருத்துவரிடம் தெரிவித்துவிட்டால், அதற்கு தகுந்த ஊசி மற்றும் மருந்துகளை வழங்குவார்கள். மேலும் கடந்த சில மாதங்களாகவே வெறிநாய்கள் கரூர் மாவட்டத்தின் பல தெருக்களில் நடமாடுவது அதிகமாகி உள்ளது. இந்த வெறிநாய்கள் சிலரை குறைத்துக் கொண்டே ஓடி கடித்துக் குதறுகின்றன. இதனால், பொதுமக்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ரோட்டில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. இதனை மாநகராட்சி ஊழியர்களும் அறிந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாய்கள் கடித்தால் உடனடியாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கரூரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதேபோல மாவட்டத்திலும் ஆங்காங்கே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதில் சில இடங்களில் பொதுமக்கள் சிலரை கடித்துள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிய கால இடைவெளியில் ஊசி செலுத்தியும், மாத்திரைகள் சாப்பிட்டும் வருகின்றனர். இதற்கிடையில் நாய் கடிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.


தெரு நாய் கடியில் அதிகம் பாதிக்கும் குழந்தைகள்....கரூரில் அதிகரித்த தெரு நாய்கள்..!
     

மருந்து தட்டுப்பாடு இல்லை: 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சீனிவாசன் கூறும்போது, “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாய் கடிக்கு மருந்துகள் தற்போது தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. மேற்படி சிகிச்சைக்கு மருந்துகளும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நாடி வந்தார். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், உதவி மருத்துவர்களும் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து சிகிச்சை செய்தும் நேற்று மாலையே வீடு திரும்ப வைத்துவிட்டனர். எனவே, வெறிநாய் கடித்த உடனே சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனையை நாட வேண்டும். நாய் கடித்து இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், நாய் கடிக்கு தகுந்தபடி இங்கு மருத்துவர்கள் மற்றும் உதவியும் மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை செய்கிறார்கள். எனவே இதைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம்” என்றார். கரூர் ஆரம்ப சுகாதார நிலையம் டிடி பெல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் மொத்தம் 37 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7 அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மேற்படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கு மருந்துகள் தற்போது தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. மேற்படி சிகிச்சைக்கு மருந்துகளும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நாய் கடிக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு முதலில் முதலுதவி செய்யப்படுகிறது. பின்னர் நாய் கடிகளுக்கு தகுந்தபடி தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன” என்றார்.


தெரு நாய் கடியில் அதிகம் பாதிக்கும் குழந்தைகள்....கரூரில் அதிகரித்த தெரு நாய்கள்..!
   

வீட்டு நாயுடன் விளையாடக் கூடாது:

நாய் கடிக்கு சிகிச்சை பெற்ற தாந்தோணி மலையைச் சேர்ந்த சரவணன் கூறுகையில், “நான் இரவு நேரத்தில் நடந்து செல்லும் போது தெரு நாய் எனது காலில் கடித்து விட்டது. எனது காலில் லேசாக காயம் ஏற்பட்டதால் அதில் லேசான வழியை உணர்ந்தேன். உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நான் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டேன். பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். மொத்தம் மூணு ஊசிகளை செலுத்தியுள்ளேன். தற்போது நான் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளேன். நாய் கடிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே நாளில் வர வைத்து ஊசி செலுத்துகின்றனர்” என்றார். நாய் கடிக்க ஆளான வெங்கமேடு சேர்ந்த கனகராஜ் கூறுகையில்,  “வீட்டில் வளர்க்கும் நாய்களிடம் மட்டும் விளையாடவே கூடாது. ஏனென்றால் அந்த நாய் எப்போது பாசமாக இருக்கும், எப்போது வெறியேறி கடிக்கும் என நாம் கணிக்க முடியாது. நாம் வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடும் போது அது என்னை கடித்துவிட்டது. இதனால், வலியால் துடித்தேன். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு அதற்கான மாத்திரைகளும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன், நான் தற்போது நலமுடன் உள்ளேன்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Embed widget