மேலும் அறிய

அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கரூர் செட்டிபாளையம் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கரூர் செட்டிபாளையம் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வினாடிக்கு, 2,198 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,328 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால், அமராவதி ஆற்றில், 1,531 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, புதிய பாசன வாய்க்காலில், 190 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகில் செட்டிபாளையம் தடுப்படையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இங்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 85.83 அடியாக இருந்தது.

கரூர் அருகே, மாயனூர் கதவனைக்கு, காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 399 கன அடி தண்ணீர் வந்தது. குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 779 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில், 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39..37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 34.12 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 5.74 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கரூர், அரவக்குறிச்சி, அனைபாளையம், கே.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கே.ஆர். புறம், பஞ்சப்பட்டி, மாயனூர், கடவூர், பாலவிடுதி, மயிலம்பட்டி களில் மழையளவு எதுவும் பதிவாகவில்லை.  

கேரளா மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் அளவு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலையின் அளவு பதிவாகாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Embed widget