மேலும் அறிய

அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கரூர் செட்டிபாளையம் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கரூர் செட்டிபாளையம் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வினாடிக்கு, 2,198 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,328 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால், அமராவதி ஆற்றில், 1,531 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, புதிய பாசன வாய்க்காலில், 190 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகில் செட்டிபாளையம் தடுப்படையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இங்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 85.83 அடியாக இருந்தது.

கரூர் அருகே, மாயனூர் கதவனைக்கு, காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 399 கன அடி தண்ணீர் வந்தது. குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 779 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில், 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39..37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 34.12 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 5.74 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரின் அளவு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கரூர், அரவக்குறிச்சி, அனைபாளையம், கே.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கே.ஆர். புறம், பஞ்சப்பட்டி, மாயனூர், கடவூர், பாலவிடுதி, மயிலம்பட்டி களில் மழையளவு எதுவும் பதிவாகவில்லை.  

கேரளா மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் அளவு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலையின் அளவு பதிவாகாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget