மேலும் அறிய

கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி வட்டம், ஓந்தாம்பட்டியிலுள்ள தனியார் விவசாய விளை நிலத்தில் இன்று வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தமிழக அரசால் "பசுமை தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், 2022-2023 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 1.77 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில்  5,77,500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு பணி தொடங்கவுள்ளது. இதில் விவசாய நிலங்களில் மட்டும் நடுவதற்கு 3,15,000 மரக்கன்றுகள் வனத்துறையினரால் நர்சரிகளில் நடவு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் தயாராக உள்ளது. விலை இல்லாமல் நீங்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம். வனத்துறையினர் நீங்கள் மரங்களை நடுவதற்கு உரிய உதவி செய்து கொடுப்பார்கள். 


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் விவசாய நிலங்களில் தேக்கு, வேம்பு, செம்மரம், மகாகனி, பெருமரம், சவுக்கு போன்ற விலை உயர்ந்த மரக்கன்றுகளை  நடவு செய்திட முன்வர வேண்டும். இன்றைய தினம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி கிராமத்தில் உள்ள சிவகுமார் அவர்களின் விளை நிலத்தில் மரக்கன்றுகள் நடக்கூடிய விழாவை தொடங்கி வைத்திருக்கிறோம். தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் தேவைப்படும் மரக்கன்றுகளை வனத்துறையிலும், அருகில் உள்ள வன அலுவலகங்களிலும் பெற்று உங்களுடைய விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டு,  நீங்கள் உங்கள் நிலத்தையும், இந்த நாட்டினுடைய வளத்தையும் பெருக்க வேண்டும். மேலும், வனத்தினுடைய பரப்பை அதிகரிக்க வேண்டும்.


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

மரக்கன்றுகள் இன்றைய தேதியில் ஒரு டன்னுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பு வரக்கூடிய 20 ஆண்டுகளில் அது முழுமையான வளர்ச்சி பெற்று இருக்கும். மிகுந்த விலை உயர்ந்த பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் கூறும் அறிவுரையின்படி மரக்கன்றுகளை நடவு செய்து, பயன்பெற வேண்டும். மேலும், மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இதனை பொதுமக்களும், விவசாய மக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு என தெரிவித்துள்ளார். 


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சரவணன், வனசரக அலுவலர்கள் செல்வகுமார், முரளிதரன், சசிஹரிபிரியா, அறிவழகன், தண்டபாணி, சிவா, கனகராஜ், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், வட்டாட்சியர் சிவக்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி, உறுப்பினர் ரவீந்திரன், நில உரிமையாளர்கள் ராஜேஸ்வரி சிவக்குமார், கீதாவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget