மேலும் அறிய

கரூரில் கோயில் நிலப் பிரச்னை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது

கரூரில் கோயில் நிலப் பிரச்சனை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் கோயில் நிலப் பிரச்சனை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. 

 


கரூரில் கோயில் நிலப் பிரச்னை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். 

 

 


கரூரில் கோயில் நிலப் பிரச்னை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது

இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கூடியிருந்த ஆண்கள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 50க்கும் மேற்பட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

 


கரூரில் கோயில் நிலப் பிரச்னை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது

 

மேலும், கைதாக மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


கரூரில் கோயில் நிலப் பிரச்னை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது

குறிப்பாக கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பதாக கோவில் நில மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் என்பவர், பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இனாம் நிலங்கள் என்றும், அதன் மூலம் பெறப்பட்ட ரயத்துவாரி பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்து செய்ததை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget