மேலும் அறிய

கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55 அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. வயலில் சோளம் சாகுபடி.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51. இவர்கள் இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி சோளம் சாகுபடி செய்யலாம் என்று ராமசாமியிடம் கேட்டுள்ளார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதனால் ராசுவின் தரப்பினருக்கும் ராமசாமி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராசு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்து ராமசாமி சாகுபடி செய்த சோழப் பயிர்களை சேதப்படுத்தி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதை அடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பினரையும் அழைத்து நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

செல்போன்கோபுரத்தில் ஏறி மிரட்டல்.

அப்போது ராமசாமி தரப்பினை சேர்ந்த தங்கவேல் 52 என்ற விவசாயி சோழ பயிரை அளித்த டாக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு போலீசார் முழுமையான விசாரணை முடிந்தவுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதை அடுத்து தங்கவேல் டாக்டரையும் வழக்கில் சேர்த்து அதனை இயக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரெட்டியாபட்டியில் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு தங்கவேல் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர முயன்றார். ஆனால் அவர் சோர்வாக இருந்ததால் கீழே இறங்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கவேலுவை பத்திரமாக மீட்டு கீழே இருக்கிறார். இதனால் அந்த பகுதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.


இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது

தரகம்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி வயது 47 சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களாக இடையபட்டி சிறுமான் பட்டி சாலையில் பாலம் கட்டும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆழம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதை அடுத்து பால கட்டுமான பணி மேல் பார்வையாளர் கரூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிக்கு வந்த தொழிலாளிகளிடம் விசாரித்தார். இதை அடுத்து அவர் சந்தேகத்தின் பெயரில் கணபதி வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கணபதி தான் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாலா விடுதி போலீசார் வழக்கு பதிந்து கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget