மேலும் அறிய

கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55 அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. வயலில் சோளம் சாகுபடி.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51. இவர்கள் இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி சோளம் சாகுபடி செய்யலாம் என்று ராமசாமியிடம் கேட்டுள்ளார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதனால் ராசுவின் தரப்பினருக்கும் ராமசாமி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராசு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்து ராமசாமி சாகுபடி செய்த சோழப் பயிர்களை சேதப்படுத்தி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதை அடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பினரையும் அழைத்து நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

செல்போன்கோபுரத்தில் ஏறி மிரட்டல்.

அப்போது ராமசாமி தரப்பினை சேர்ந்த தங்கவேல் 52 என்ற விவசாயி சோழ பயிரை அளித்த டாக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு போலீசார் முழுமையான விசாரணை முடிந்தவுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதை அடுத்து தங்கவேல் டாக்டரையும் வழக்கில் சேர்த்து அதனை இயக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரெட்டியாபட்டியில் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு தங்கவேல் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர முயன்றார். ஆனால் அவர் சோர்வாக இருந்ததால் கீழே இறங்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கவேலுவை பத்திரமாக மீட்டு கீழே இருக்கிறார். இதனால் அந்த பகுதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.


இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது

தரகம்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி வயது 47 சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களாக இடையபட்டி சிறுமான் பட்டி சாலையில் பாலம் கட்டும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆழம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதை அடுத்து பால கட்டுமான பணி மேல் பார்வையாளர் கரூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிக்கு வந்த தொழிலாளிகளிடம் விசாரித்தார். இதை அடுத்து அவர் சந்தேகத்தின் பெயரில் கணபதி வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கணபதி தான் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாலா விடுதி போலீசார் வழக்கு பதிந்து கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
கண்ணீரை அடக்க முடியாமல் அழுத சிஎம் விஜய்! கரூரில் 31 பேருக்கு வேலை கொடுத்தபோது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
கண்ணீரை அடக்க முடியாமல் அழுத சிஎம் விஜய்! கரூரில் 31 பேருக்கு வேலை கொடுத்தபோது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Embed widget