மேலும் அறிய

கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55 அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. வயலில் சோளம் சாகுபடி.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51. இவர்கள் இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி சோளம் சாகுபடி செய்யலாம் என்று ராமசாமியிடம் கேட்டுள்ளார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதனால் ராசுவின் தரப்பினருக்கும் ராமசாமி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராசு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்து ராமசாமி சாகுபடி செய்த சோழப் பயிர்களை சேதப்படுத்தி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதை அடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பினரையும் அழைத்து நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

செல்போன்கோபுரத்தில் ஏறி மிரட்டல்.

அப்போது ராமசாமி தரப்பினை சேர்ந்த தங்கவேல் 52 என்ற விவசாயி சோழ பயிரை அளித்த டாக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு போலீசார் முழுமையான விசாரணை முடிந்தவுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதை அடுத்து தங்கவேல் டாக்டரையும் வழக்கில் சேர்த்து அதனை இயக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரெட்டியாபட்டியில் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு தங்கவேல் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர முயன்றார். ஆனால் அவர் சோர்வாக இருந்ததால் கீழே இறங்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கவேலுவை பத்திரமாக மீட்டு கீழே இருக்கிறார். இதனால் அந்த பகுதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.


இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது

தரகம்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி வயது 47 சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களாக இடையபட்டி சிறுமான் பட்டி சாலையில் பாலம் கட்டும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆழம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதை அடுத்து பால கட்டுமான பணி மேல் பார்வையாளர் கரூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிக்கு வந்த தொழிலாளிகளிடம் விசாரித்தார். இதை அடுத்து அவர் சந்தேகத்தின் பெயரில் கணபதி வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கணபதி தான் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாலா விடுதி போலீசார் வழக்கு பதிந்து கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Rajiv Gandhi: பெண்ணிடம் தவறாக பேசினேனா? - ராஜீவ் காந்தி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
DMK Rajiv Gandhi: பெண்ணிடம் தவறாக பேசினேனா? - ராஜீவ் காந்தி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
​தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’
தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’...
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget