மேலும் அறிய

வேலை கேட்டு கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட்டதால் அந்த வருமானத்தை கொண்டு ஒரு வேளை வெளியில் சாப்பிட்டும், மருத்துவச் செலவையும் பார்த்து வந்துள்ளார்.

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமையில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரம் தோறும் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது தெரு பிரச்சனை, ஊர் (குடிநீர், பொது கழிப்பிடம், சாக்கடை) அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் மனு வழங்கி பிரச்சனையை கூறிய தீர்வுகளை கண்டு வருகின்றனர்.

LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (06.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-427 செவ்வாய் டிரா அவுட் - முதல் பரிசு 75 லட்சம்

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த முத்துரெங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவருக்கு தாய், தந்தை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்று வாழ்ந்து வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாததால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை பெற்று உண்டு வருகிறார். 

 




வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட்டதால் அந்த வருமானத்தை கொண்டு ஒரு வேளை வெளியில் சாப்பிட்டும், மருத்துவச் செலவையும் பார்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கைரேகை 100 நாள் வேலை திட்ட இயந்திரத்தில் பதிவாகவில்லை என்றும், ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி ஊராட்சி  அலுவலகத்தில் அவரை அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. 

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

இதனால் கிராமத்திலிருந்து பேருந்து மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், ஆட்சியரிடம் தனக்கு 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், தனக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் 1,500 ரூபாய் உதவித் தொகை போதுமானதாக இல்லாததால், 100 நாள் வேலை திட்டத்தில் தன்னை இணைக்க வேண்டும் என்றும், தன்னை போன்ற மாற்றுத் திறனாளிகள் வேலை பார்த்து வரும் நிலையில், தனக்கு மட்டும் தராமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

மேலும் இவரது மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். முதியோர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget