மேலும் அறிய

jayalalithaa: ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவுநாள்..! சமாதியில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்..! கண்ணீர்மல்க அஞ்சலி..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுகவினர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க.வினர் அவரது நினைவிடத்திலும், பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைகள் மற்றும் அவரது புகைப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ஜெயலலிதா நினைவு நாள் இன்று

ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி  24  1948 பிறந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (டிசம்பர் 5 2016) முதலமைச்சராக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை ‘புரட்சித் தலைவி' எனவும் 'அம்மா' எனவும் இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார்.  அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே மரியாதை செலுத்த உள்ளனர்.

அமைதி ஊர்வலம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அமைதி ஊர்வலமாக சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை 10 மணிக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இதனால் பேரணி செல்லும் பகுதியில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி, வாலாஜா சாலை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் போலீசாரை நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மலர்களால் அலங்கரிப்பு

ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர்களால் அலகரிக்கப்பட்டுள்ளது.


jayalalithaa: ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவுநாள்..! சமாதியில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்..! கண்ணீர்மல்க அஞ்சலி..

தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களில் ஜெயலலிதா படத்தை வைத்து மலர்களால் அலகரித்து அதிமுக நிர்வாகிகள் மரியாதை செல்லுத்துகின்றனர்.

தனித்தனியாக மரியாதை

ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கும், டிடிவி தினகரம் நண்பகல் 11 மணிக்கும், சசிகலா நண்பகல் 11.30 மணிக்கு ஆகியோர் தனித்தனியாக மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  நெல்லை திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
Breaking News LIVE: நெல்லை திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  நெல்லை திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
Breaking News LIVE: நெல்லை திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
IND Vs CAN, T20 Worldcup: கழற்றி விடப்படும் கோலி? கடைசி லீக் போட்டியில் கனடாவை வீழ்த்துமா இந்திய அணி?
கழற்றி விடப்படும் கோலி? கடைசி லீக் போட்டியில் கனடாவை வீழ்த்துமா இந்திய அணி?
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல் - மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல் - மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!
Embed widget