மேலும் அறிய

Jallikattu: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நிறைவு - பரிசுகளை அள்ளிய மாடுகளும், வீரர்களும்..!

நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்று நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

நிறைவடைந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள, புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, கடந்த 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால்,  பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த நிலையில், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனிடையே, மாடுபிடி வீரர்களும், உரிமையாளர்களுடன் மாடுகளும் அங்கு குவிய தச்சங்குறிச்சி கிராமமே களைக்கட்டியது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மருத்துவ குழுவினர் தச்சங்குறிச்சி பகுதிக்கு வந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்து இருந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதேபோல் காளைகளை அழைத்து வரக்கூடிய உரிமையாளர்கள் தரப்பில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சீறிப்பாய்ந்த காளைகள்:

பாரம்பரிய முறைப்படி முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு முதல் மரியாதை செய்யப்பட்டது. பின்பு வீரர்கள் அனைவரும் ஜல்லிகட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர். அதைதொடர்ந்து,  அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து, நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து, வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் மடக்கி பிடித்து திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடனடியாக பரிசுகளும் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற வீரர்கள்

இப்போட்டியில் 500 காளைகள் பதிவு செய்த நிலையில் வாடிவாசலில்  இருந்து 485 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் 17 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த தென்னலூர் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரனுக்கு இருச்சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், தஞ்சை மாவட்டம் மருதகுடியைச் சேர்ந்த ராஜ்குமாரின் மதர் என்ற காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இன்று காலை முதல் தொடங்கிய இப்போட்டியில்  மூன்று காவலர்கள் உட்பட 70 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலத்த காயமடைந்த 12 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் படிக்க

Chennai : சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம்... போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Embed widget