மேலும் அறிய

ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரும் சென்னை மாநகராட்சி கட்டடம்.. ஏன் தெரியுமா?

இந்த ஆண்டுக்கான பிரச்சாரமானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1960ல் ரஃபேல் ட்ருஜில்லோவின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்ட டொமினிகன் குடியரசு ஆர்வலர்களான மிராபல் சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த நாளில் ஆரஞ்சு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உணர்த்தப்படுகிறது. பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கும் விதமாக இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. இன்று சென்னை மாநகராட்சி கட்டடம் ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிர்கிறது

அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பிரச்சாரமானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும் 16 நாள் முயற்சியாகும். இந்த நாளைப் பற்றி மேலும் சில தகவல்கள் கீழே....


ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரும் சென்னை மாநகராட்சி கட்டடம்.. ஏன் தெரியுமா?

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் 2022 கருப்பொருள் ‘யுனைட்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்பாடு.’ ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த பிரச்சாரம் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும் 16 நாட்கள் செயல்பாட்டின் முயற்சியாக இருக்கும்.

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், பெண்கள் உரிமை ஆர்வலர்களுடன் ஒற்றுமையாகத் துணைநிற்பதற்கும், பெண்ணிய இயக்கங்களை ஆதரிப்பதற்கும் பெண்கள் மீதான வன்முறையைத் தடுப்பதற்காக அனைத்து சமூகங்களையும் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டது இது."

1979ல் ஐநா பொதுச் சபை, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாட்டை (CEDAW) நிகழ்த்தியது. இன்னும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும்  காணக்கூடிய ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத உலகத்திற்கு அடித்தளம் அமைக்க பொதுச் சபை 48/104 தீர்மானத்தை வெளியிட்டது.

1981 முதல், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பும் நாளாக நவம்பர் 25 நினைவுகூரப்படுகிறது. 1960ல் டொமினிகன் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் ட்ருஜிலோவின் உத்தரவின் பேரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று அரசியல் ஆர்வலர்களான மிராபால் சகோதரிகளுக்காக இந்த தேதி நினைவுகூரப்படுகிறது.

பொதுச்சபை 20 டிசம்பர் 1993 அன்று 48/104 தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும், அது CEDAWன் 54/134 தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டது, பிப்ரவரி 7, 2000 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 25ஐ அதிகாரப்பூர்வமாக நியமித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (VAWG) இன்று உலகில் மிகவும் பரவலான, தொடர்ச்சியான மற்றும் பேரழிவு தரும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். மேலும், அதைச் சுற்றியுள்ள தண்டனையின்மை, மௌனம், களங்கம் மற்றும் அவமானம் காரணமாக இது இன்னும் அதிகமாகப் புகாரளிக்கப்படாமல் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் பாலின அடிப்படையிலான வன்முறையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நினைவுகூரப்படுகிறது.

இந்த பாலின அடிப்படையிலான வன்முறை உடல், பாலியல் மற்றும் உளவியல் வடிவங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு நாள். அனைத்து வயதினருக்கும் பாலின அடிப்படையிலான வன்முறையின் பாதகமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்கிறது.

மேலும், சமத்துவம், மேம்பாடு மற்றும் அமைதிக்கான பாதையில் எண்ணற்ற தடைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்குக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இதுவாகும்.

இந்த நாளில் ஆரஞ்சு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உணர்த்தப்படுகிறது. பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கும் விதமாக இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
Today Rasipalan:மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
Today Rasipalan:மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா? பள்ளியில் கும்பல் அட்டூழியம்.. தெலங்கானாவில் பதற்றம்!
காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா? பள்ளி மீது தாக்குதல்.. தெலங்கானாவில் பதற்றம்!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
அம்பை கொண்டு மசூதியை குறி வைத்த பாஜக வேட்பாளர்? யார் இந்த மாதவி? வைரலாகும் சர்ச்சை வீடியோ!
அம்பை கொண்டு மசூதியை குறி வைத்த பாஜக வேட்பாளர்? யார் இந்த மாதவி? வைரலாகும் சர்ச்சை வீடியோ!
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Embed widget