மேலும் அறிய

MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்தால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியமும் சுகாதாரத்துறை வல்லுனர்கள், உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வுகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையைப் போலவே கொரோனா பரவல் அதிகரித்துள்ள மதுரை, கோவை , சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”முதலமைச்சர் உத்தரவின்படி இன்று மதுரை  நாளை கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். நேற்று முன்தினம் 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது.


MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த  தமிழக அரசு ரூபாய் 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியதில்,  முதற்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. அதில், நேற்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ள நிலையில் , நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்து என்பது நோயாளியின் தொடக்க சிகிச்சைக்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்தாகும். மத்திய அரசிடம் இருந்து 7 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20 ஆயிரம் என்பதால் தான் தட்டுப்பாடு நீடிக்கிறது. 

தனியார் மருத்துவனையினர் ரெம்டெசிவர் தேவையென பொய்யான தோற்றத்தை உருவாக்குவது வருத்தம் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நோயாளிகளை பரிதவிக்க மருத்துவர்கள் விடக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் என்பது தொடர்ச்சியாக தமிழகதிற்கு கிடைத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது. மேலும்,100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணிகள், இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் பின்பு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்



MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

மேலும், ”மோசமான சூழ்நிலையில் செல்லும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு மட்டும் சிகிச்சை செய்துவிட்டு, கட்டமைப்பு இல்லாத தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும” என்று தெரிவித்துள்ளார்

 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget