மேலும் அறிய

MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்தால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியமும் சுகாதாரத்துறை வல்லுனர்கள், உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வுகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையைப் போலவே கொரோனா பரவல் அதிகரித்துள்ள மதுரை, கோவை , சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”முதலமைச்சர் உத்தரவின்படி இன்று மதுரை  நாளை கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். நேற்று முன்தினம் 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது.


MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த  தமிழக அரசு ரூபாய் 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியதில்,  முதற்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. அதில், நேற்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ள நிலையில் , நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்து என்பது நோயாளியின் தொடக்க சிகிச்சைக்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்தாகும். மத்திய அரசிடம் இருந்து 7 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20 ஆயிரம் என்பதால் தான் தட்டுப்பாடு நீடிக்கிறது. 

தனியார் மருத்துவனையினர் ரெம்டெசிவர் தேவையென பொய்யான தோற்றத்தை உருவாக்குவது வருத்தம் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நோயாளிகளை பரிதவிக்க மருத்துவர்கள் விடக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் என்பது தொடர்ச்சியாக தமிழகதிற்கு கிடைத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது. மேலும்,100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணிகள், இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் பின்பு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்



MA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

மேலும், ”மோசமான சூழ்நிலையில் செல்லும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு மட்டும் சிகிச்சை செய்துவிட்டு, கட்டமைப்பு இல்லாத தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும” என்று தெரிவித்துள்ளார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget