மேலும் அறிய

Saattai Duraimurugan : தேர்தலுக்கு முன் எத்தனை பேரை சிறைப்படுத்துவது?- யூ ட்யூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

தேர்தலுக்கு முன்பு யூடியூபில் அவதூறு பரப்பியதாக ஒவ்வொருவரையும் நாம் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகத் தகவல் வெளியானது. 

உயர் நீதிமன்றத்தை நாடிய சாட்டை துரைமுருகன் 

இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவதூறாகப் பேசியதாக, கைது செய்யப்பட்டார், இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

ஜாமீன் ரத்து

ஏற்கனவே  தஞ்சை சம்பவத்தில் மீண்டும் இப்படிப் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்த நிலையில், மீண்டும் துரைமுருகன் இவ்வாறு அவதூறு பேசியதாக காவல்துறை வாதிட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஏப்.8) நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

பார்வையை வெளிப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவது தவறில்லை

இதுகுறித்து மேலும் பேசிய அமர்வு, ’’தேர்தலுக்கு முன்பு யூடியூபில் அவதூறு பரப்பியதாக ஒவ்வொருவரையும் நாம் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒருவரின் பார்வையை வெளிப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவது என்பது அவரின் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகாது ’’என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் விமர்சனம்

சாட்டை துரைமுருகன்  யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget