மேலும் அறிய

அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - கவனம் ஈர்த்த ஆளுநர் உரை..!

தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் என ஆளுநர் தெரிவித்தார்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவை செயலாளர்  அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16-வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் இன்று  தொடங்கியது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து குறிப்பிட்டார். குறிப்பாக நீண்ட காலமாக கோரப்படும் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என்ற குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். அவரது உரையில்,


அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - கவனம் ஈர்த்த ஆளுநர் உரை..!

''யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப உயிர்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும். அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும், இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்'' என்றார்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார்.அவருக்கு ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.


அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - கவனம் ஈர்த்த ஆளுநர் உரை..!

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கினர். அவர்  தனது உரையை “காலை வணக்கம்” என்று தமிழில் தொடங்கினார். பின்னர், “எளிமையாக வாழுங்கள்” என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தினார். மேலும், “தமிழ் மிகவும் இனிமையான மொழி” என்றும் கூறினார். 
காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Chennai Power Cut: சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Chennai Power Cut: சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Embed widget