மேலும் அறிய

கொரோனா நோயாளியும் அரசு மருத்துவரும்: பயனுள்ள பதிவு

தன்னை சந்தித்த கொரோனா நோயாளி ஒருவருடன் நடந்த உரையாடலை அரசு மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமைந்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, தன்னை சந்திக்க வந்த 70 வயது பெண்மணியுடன்  மேற்கொண்ட நோய் குறித்த விசாரணையை உரையாடலை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.   
 கொரோனா இரண்டாம் அலை நோய்த் தொற்று தொடர்பான எச்சரிக்கை கோரும் பதிவு என்பதால் இங்கே அதை செய்தியாக்குகிறோம்.     

ஃபரூக் அப்துல்லா:  "என்னங்கமா  செய்யுது?" 

பெண்மணி:  " மூனு நாலு நாலா உடல் சோர்வு அசதி.. 
சரியா சாப்ட முடியல..பசி எடுக்க மாட்டேங்குது" 

ஃபரூக் அப்துல்லா:  "ஓகே.. காய்ச்சல் இருந்துச்சா.? 

பெண்மணி:  "காய்ச்சல் இல்ல சார்.."

ஃபரூக் அப்துல்லா:  "இருமல் இருக்குங்களா மா?"

பெண்மணி:  "லேசான இருமல் அப்பப்போ வருது.." 

ஃபரூக் அப்துல்லா:  " நல்லா யோசிச்சு சொல்லுங்க.. உங்களுக்கு கடந்த ஒரு வாரத்துல காய்ச்சல் அல்லது  அடிச்சு போட்ட மாதிரி வலி அசதி இருந்துச்சா?" 

பெண்மணி:  "ஆமா..சார். சனிக்கிழமை அன்னைக்கு பூறா எழுந்துக்கவே முடியல. அவ்வளவு அசதி..வலி.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. " 

ஃபரூக் அப்துல்லா:  "மூச்சு விடுறதுல சிரமம் இருக்கா?" 

பெண்மணி: "லேசா மூச்சு விடுறதுல சிரமம் இருக்குற மாதிரி தான் இருக்கு" 

ஃபரூக் அப்துல்லா: "மா.. இந்த தடவ கொரோனாவுக்கு பல பேருக்கு காய்ச்சல் வராம இந்த மாதிரி உடம்பு அசதி வலி ஏற்படுது.. கூடவே உங்களுக்கு இருமல் இருக்குறதால.. சிடி ஸ்கேன் எடுத்து பாத்துரலாம்.." 

பெண்மணி:  "சார்... ரெண்டு நாள் மாத்திரை போட்டு பாத்துக்குறேனே.." 

 (பல்ஸ் ஆக்சிமீட்டர் விரலில் வைத்துப் பார்த்தேன். 
93% -94% என்று இருந்தது)

ஃபரூக் அப்துல்லா:  "இல்ல மா.. ஏற்கனவே அஞ்சாவது நாள் ஆயிடுச்சு.  நாளைக்கு சிடி ஸ்கேன் எடுத்து ரிசல்ட் வந்தா.. ஆறாவது நாள். இதுக்கு மேல லேட் பண்ண கூடாது. நீங்க நாளைக்கு எடுக்கணும் கண்டிப்பா.. இது என்னோட அன்புக்கட்டளை "

பெண்மணி:  "சரி சார் . எடுத்துட்டு வர்றேன்.." என்று பாராமுகமாக சென்றார் . 

இன்று அவரது உறவினர் ஸ்கேனைக் கொண்டு வந்தார். 
அந்த நோயரால் எழுந்து வர முடியவில்லை என்பதால் இவர் மட்டும் வந்திருக்கிறார்

நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில்  கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 

உடனே நோயர் இன்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு விட்டார். 

நிச்சயம் தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களின் திறனாலும் உழைப்பாலும் 
நலம் பெற்று வீடு திரும்புவார் என்று இறைவனை வேண்டுவோம். 


கொரோனா நோயாளியும் அரசு மருத்துவரும்: பயனுள்ள பதிவு

 

இந்த நிகழ்வில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் 

 கொரோனாவில் காய்ச்சல் கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை 

 கடும் உடல் அசதி / உடல் சோர்வு போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம். கூடவே வயிற்றுப்போக்கும் இருக்கலாம்.

 கடும் உடல் அசதி அதை ஒட்டிய இருமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை அலட்சியம் செய்வது கூடாது. 

 தற்போது வரும் காய்ச்சலுக்கு கட்டாயம் ஊசி போடக்கூடாது. காரணம் ஊசி போடுவதால் அறிகுறிகள் அடங்கி விடும். இதனால் பொன்னான பொழுதை வீட்டில் கழித்து விட்டு காலம் கடந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். 

 சரியான நேரத்தில் அறிகுறிகளைக் கண்டறிந்து சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும் 

நான் சந்தித்த இந்த பெண்மணி இன்னும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. 60+ வயதினருக்கு கடந்த மார்ச் 1  முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எத்தனையோ முதியோர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து 45+ வயதினர் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும். 

அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அரசு மருத்துவமனைகளை நம்பி விரைவாக சிகிச்சை பெறுங்கள். சிகிச்சைக்கு காலம் தாழ்த்தாதீர்கள்.  

 கட்டாயம்  முதியோர்கள் வெளியிடங்களுக்கு அவசியமின்றி வெளியே வரக்கூடாது. 
அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர நேர்ந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாகக் கூடுதல் கூடாது. 

 கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான விசயங்களை பரப்ப வேண்டும். பொய்களை பரப்பக்கூடாது.  

 பொதுமக்கள் அறிகுறிகள்  தோன்றினால் தாமே சீக்கிரமாக பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும். 
பரிசோதனை செய்து கொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
இவ்வாறு, அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்தார்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget