மேலும் அறிய

விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல்... சிலைகளை ஒப்படைக்காவிட்டால் போராட்ட எச்சரிக்கை - கரூரில் பரபரப்பு

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல வைத்த விவகாரத்தில், சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என சிவசேனா கட்சி மாநில செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

 


விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல்... சிலைகளை ஒப்படைக்காவிட்டால் போராட்ட எச்சரிக்கை - கரூரில் பரபரப்பு

 

விநாயகர் சிலைகள்:

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விதிகளை மீறி ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகார் அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் இருந்த மூன்று விநாயகர் சிலை கூடங்களுக்கு பூட்டி சீல் வைத்தனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அதற்கு விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும், மண்பாண்ட தொழிலாளர்கள் புகாரின் பேரில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

எச்சரிக்கை:

இந்த நிலையில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் சுங்ககேட் பகுதியில், விநாயகர் சிலைகள் சீல் வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி மாநில செயலாளர், கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல்... சிலைகளை ஒப்படைக்காவிட்டால் போராட்ட எச்சரிக்கை - கரூரில் பரபரப்பு

 

நான்கு மாதங்களுக்கு முன்பே இப்பகுதியில் சிலை செய்யும் பணியை வட மாநில தொழிலாளர்கள் துவங்கிய போது அதிகாரிகள் அந்த பணியை தடுத்து நிறுத்தி இருந்தால், சுமார் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்த வட மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தனிநபர் ஒருவரின் வியாபார நோக்கத்திற்காக, அவர் அளித்த புகாரின் பேரில் முறையாக ஆய்வு செய்யாமல் விநாயகர் சிலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளை காலை 10 மணியளவில் கரூர் மாநகரில் இந்து அமைப்பினர் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். 

 

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget