மேலும் அறிய

Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. நேற்றே புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாகவே கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் மழை அதிகமாக பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல்:

குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது, புயல் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் நாளை வரை சென்னையில் மழை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேயர் பிரியா கூறியிருப்பதாவது, “ சென்னை மாநகராட்சி சார்பாக வரக்கூடிய புயலாக இருந்தாலும் சரி, பருவமழையாக இருந்தாலும் சரி எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தயார்:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி சார்பாக எடுத்துக் கொண்டுள்ள பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 எச்.பி. திறன் கொண்ட 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

இப்போது கூடுதலாக 60 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து கால்வாய்களும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வரக்கூடிய மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தயாராக உள்ளோம்.

மாநகராட்சியை பொறுத்தவரை 22 ஆயிரம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலத்திற்காகவே கூடுதலாக வார்டுகளுக்கு கூடுதலாக 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்களுடன் அக்டோபர் மாதமே இணைந்து செயல்பட்டு வருகிறோம். “

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கையில் தமிழ்நாடு அரசு:

ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக காணப்படும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். பாம்பனில் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.  தூத்துக்குடியிலும் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை காரணமாக சென்னை தத்தளித்தது. சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கி நின்றது. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த மழை, புயல் எச்சரிக்கையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget