மேலும் அறிய

Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. நேற்றே புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாகவே கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் மழை அதிகமாக பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல்:

குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது, புயல் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் நாளை வரை சென்னையில் மழை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேயர் பிரியா கூறியிருப்பதாவது, “ சென்னை மாநகராட்சி சார்பாக வரக்கூடிய புயலாக இருந்தாலும் சரி, பருவமழையாக இருந்தாலும் சரி எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தயார்:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி சார்பாக எடுத்துக் கொண்டுள்ள பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 எச்.பி. திறன் கொண்ட 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

இப்போது கூடுதலாக 60 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து கால்வாய்களும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வரக்கூடிய மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தயாராக உள்ளோம்.

மாநகராட்சியை பொறுத்தவரை 22 ஆயிரம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலத்திற்காகவே கூடுதலாக வார்டுகளுக்கு கூடுதலாக 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்களுடன் அக்டோபர் மாதமே இணைந்து செயல்பட்டு வருகிறோம். “

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கையில் தமிழ்நாடு அரசு:

ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக காணப்படும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். பாம்பனில் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.  தூத்துக்குடியிலும் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை காரணமாக சென்னை தத்தளித்தது. சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கி நின்றது. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த மழை, புயல் எச்சரிக்கையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு புரட்சி!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget