மேலும் அறிய

மேகதாது அணை: தமிழகத்திற்கு தண்ணீர் வராது! பாலைவனமாகும் அபாயம்! விவசாயிகள் கொந்தளிப்பு

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை பாராட்டுகிறோம்.

நிச்சயமாக மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என  தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ் மாசிலாமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ் மாசிலாமணி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரி  கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழக அரசு கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை பாராட்டுகிறோம். அதுபோல உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை பாராட்டுகிறோம். 

அதே நேரத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையிடலாம். இதற்கு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மேகதாது அணை கட்டுமானத்துக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சேர்த்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த விதத்திலும் இதனை அனுமதிக்க மாட்டோம். இந்த அணையை  கட்டும் இடத்தை நேரடியாக நாங்கள் சென்று பார்வையிட்டோம், நிச்சயமாக மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். எனவே காவிரி ஆணையமோ, மத்திய நீர்வள ஆணையமோ மேகதாது அணை கட்டுவதற்கான கருத்தினை பரிசீலனை செய்யக்கூடாது.

அண்மையில் பொழிந்த மழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் அறுவடை பயிர்கள் பாதிக்கப்பட்டது. இளம் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக கணக்கெடுப்புகள் செய்து நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சம்பா, தாளடி பயிர்களுக்கு பயிர் காப்பீடு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

இந்த மாதம் இறுதிவரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறோம். மத்திய ஆய்வு குழுவினர் தொடர் மழைக்குப் பின்னர் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். ஈரப்பத தளர்வு தேவை என்பதை தமிழக அரசு சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், ஆய்வு குழுவினர் சென்று பல நாட்கள் ஆகி இதுவரை ஈரப்பதத் தளர்வு வழங்கப்படவில்லை. அறுவடை முடிந்து, கொள்முதல் முடிகிற நேரம் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நியாயத்தை, பங்கிட்டை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாக நாங்கள் உணர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget