மேலும் அறிய

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த வாக்கு எண்ணும் மையம்.. 5 அடுக்கு பாதுகாப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7  மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் ஆகிய அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டது. அதன் பின் பலத்த போலீஸ் பாதுக்கப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பத்திரமாக காப்பு அறையில் வைக்கப்பட்டது. காப்பு அறையில் வைக்கப்பட்ட பின் அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் பழுதின்றி வேலை செய்வதை உறுதி செய்த அதிகாரிகள் அந்த அறைக்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதனால் துணை ராணுவப்படையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப்படை போலீசார், மாவட்ட போலீசார் என மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்களை சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
Embed widget