மேலும் அறிய

அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின் தடை கூடாது.. அதிரடி உத்தரவு

அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.

அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.

அண்மையில் அமைச்சர் துரைமுருகன் திமுகவுக்கு 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தினை ஒட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் பாதியிலேயே மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் துரைமுருகன் மின் வாரியத் துறை உதவிப் பொறியாளரை மேடையில் இருந்தவாறே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். மின் தடை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் தான் இப்படியொரு உத்தரவு மின் வாரியத்தில் இருந்து உயர் அதிகாரிகளுக்குப் பறந்துள்ளது. 

அதன்படி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்த நாட்களில் அமைச்சர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறதோ அன்று மின் சாதனங்கள் பராமரிப்புப் பணியினை அந்தக் குறிப்பிட்ட பகுதியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மின் விநியோகம் தடையின்றி சீராக இருப்பதை முன் கூட்டியே வலியுறுத்தி கண்காணிக்க வேண்டியது உதவிப் பொறியாளரின் பணி.

மேற்பார்வை பொறியாளர்களாக இருப்போர், மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் விவரத்தை பெற்றிட வேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும். அமைச்சர்கள் நிகழ்ச்சி ஏதும் உறுதியானால் துணை மின் நிலையத்தில் கூடுதல் ஊழியர்கள் இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்வது கட்டாயம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் கேள்வி:

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பரவலாக பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ன்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அதில் அவர், மின்சாரம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அரசு மக்களுக்கு மின்சாரம் வழங்க தவறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்:

இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடை காலங்களை எதிர்கொள்ள கூடிய வகையில், தேவையான மின்சாரத்தை நாம் கையிருப்பில் வைத்திருக்க கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்கு அளவை கணக்கிட்டு, ஏறத்தாழ 3000 மெகாவாட் அளவிற்கு குறைந்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து நாம் பெற்றுவந்த மின்சாரம் திடீரென நின்றது. ஒரே நாளில் 796 மெகாவாட்   திடீரென தடைபட்டது. இதனால் மின் தடை ஏற்பட்டது. அது துரித கதியில் சரி செய்யப்பட்டது என்றார்.
 

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget