மேலும் அறிய

அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின் தடை கூடாது.. அதிரடி உத்தரவு

அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.

அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.

அண்மையில் அமைச்சர் துரைமுருகன் திமுகவுக்கு 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தினை ஒட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் பாதியிலேயே மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் துரைமுருகன் மின் வாரியத் துறை உதவிப் பொறியாளரை மேடையில் இருந்தவாறே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். மின் தடை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் தான் இப்படியொரு உத்தரவு மின் வாரியத்தில் இருந்து உயர் அதிகாரிகளுக்குப் பறந்துள்ளது. 

அதன்படி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்த நாட்களில் அமைச்சர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறதோ அன்று மின் சாதனங்கள் பராமரிப்புப் பணியினை அந்தக் குறிப்பிட்ட பகுதியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மின் விநியோகம் தடையின்றி சீராக இருப்பதை முன் கூட்டியே வலியுறுத்தி கண்காணிக்க வேண்டியது உதவிப் பொறியாளரின் பணி.

மேற்பார்வை பொறியாளர்களாக இருப்போர், மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் விவரத்தை பெற்றிட வேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும். அமைச்சர்கள் நிகழ்ச்சி ஏதும் உறுதியானால் துணை மின் நிலையத்தில் கூடுதல் ஊழியர்கள் இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்வது கட்டாயம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் கேள்வி:

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பரவலாக பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ன்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அதில் அவர், மின்சாரம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அரசு மக்களுக்கு மின்சாரம் வழங்க தவறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்:

இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடை காலங்களை எதிர்கொள்ள கூடிய வகையில், தேவையான மின்சாரத்தை நாம் கையிருப்பில் வைத்திருக்க கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்கு அளவை கணக்கிட்டு, ஏறத்தாழ 3000 மெகாவாட் அளவிற்கு குறைந்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து நாம் பெற்றுவந்த மின்சாரம் திடீரென நின்றது. ஒரே நாளில் 796 மெகாவாட்   திடீரென தடைபட்டது. இதனால் மின் தடை ஏற்பட்டது. அது துரித கதியில் சரி செய்யப்பட்டது என்றார்.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - சி.வி.சண்முகத்தின் ஏரியாவிலேயே சவால் விட்ட சசிகலா!
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
EPS slams DMK:
EPS slams DMK: "கொள்கை தான் வேறு.. திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு! மோடி முன்னிலையில் சீறிய எடப்பாடி..
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
Embed widget