மேலும் அறிய

ஆசையாக காலி நிலத்தில் நடும் மரங்கள் !! நாளை உங்கள் வீட்டையே தகர்க்கும் அபாயம்

நிலத்துக்கு அடியில் செல்லும் வேர்கள் வளர்வது வெளிப்படையாக தெரியாது. இதனால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படும் போது அதற்கான காரணங்களை ஆராயும் போது தான் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரிய வரும்.

எதிர் காலத்தில் வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் மக்கள் காலி மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு காலி மனைகள் வாங்கியவர்கள் அதில் , மரங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமான நடைமுறை தான்.

இதன்படி, காலி மனையில் பல்வேறு வகை மரங்களை வளர்ப்பவர்கள் , அதில் வீடு கட்டும் போது பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எதிர் காலத்தில் வீடு கட்டும் வரை, நிலத்தை காலியாக இருக்கும் போது அதில் மரங்கள் வளர்ப்பதால் பயன் கிடைக்குமே என்று மக்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் காலி நிலத்தில் மரம் வளர்ப்பதால், உரிமையாளருக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதுடன் , சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் , இப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் மரங்களால் அந்த நிலத்தில் வீடு கட்டும் போது பல்வேறு புதிய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

வேர் பரவும் மரங்கள் - கட்டிடத்தில் விரிசல்

பெரும்பாலான சமயங்களில் நிலம் வாங்குவோர் , அதன் மையப் பகுதியில் வீடு கட்ட இடம் விட்டு , ஓரங்களில் மரங்கள் வளர்க்கின்றனர். இந்த மரங்களால் அங்கு எதிர்காலத்தில் கட்டப்படும் வீட்டுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும்.

எனவே , காலி நிலங்களின் ஓரங்களில் மரம் நடும் நிலையில் , அதிக அளவுக்கு வேர் பரவும் வகையை சேர்ந்த மரங்களை தவிர்ப்பது நல்லது. அதிக தொலைவுக்கு வேர் பரவும் மரங்களை நட்டால் அங்கு கட்டப்படும் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலத்தின் ஓரத்தில், தான் மரங்களை வளர்க்கிறோம் என்றாலும், அதன் வேர்கள் பல்வேறு பக்கங்களில் பரவ வாய்ப்புள்ளது.

இதில் மனையின் மையப் பகுதியில் கட்டடம் கட்டும் போது அதன் அடியில் மரத்தின் வேர்கள் ஊடுருவ வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது பெரும்பாலான கட்டடங்கள், பிரேம்டு ஸ்டிரக்ட்சர் என்ற முறையில், துாண்கள், பீம்கள் அமைத்து தான் கட்டப்படுகின்றன. இதில் பக்கவாக்கில் இருக்கும் மரத்தின் வேர்கள் துாண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பரவ வாய்ப்புள்ளது.

இப்படி, தொடர்ந்து பரவும் வேர், குறிப்பிட்ட காலத்தில் வெளிப் புறத்தில் மரத்தின் கிளைகள் போன்று தடிமனாக வளர வாய்ப்புள்ளது. நிலத்தில் மண் அடுக்குகளுக்கு இடையில் செல்லும் வேர்கள் படிப்படியாக வளரும் நிலையில் மண் அடுக்குகளை தாண்டி , கட்டடத்தின் நிலைப்பு தன்மையை பாதிக்கும்.

இவ்வாறு நிலத்துக்கு அடியில் செல்லும் வேர்கள் வளர்வது வெளிப்படையாக தெரியாது. வேர்கள் வளர்ந்து, அதனால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படும் போது அதற்கான காரணங்களை ஆராயும் போது தான் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரிய வரும்.

எனவே, காலி மனையில் மரங்கள் வளர்க்கும் போது எதிர் காலத்தில் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
Tirunelveli: 8 மாதத்தில் அதிகரித்த கொலைகள்.. கடந்த ஆண்டை விட அதிகம்.. விழிபிதுங்கும் நெல்லை மாவட்ட காவல்துறை!
Tirunelveli: 8 மாதத்தில் அதிகரித்த கொலைகள்.. கடந்த ஆண்டை விட அதிகம்.. விழிபிதுங்கும் நெல்லை மாவட்ட காவல்துறை!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
இடைத்தேர்தல் நெருங்குது... த.வெ.க. முடிவு என்ன? திக்குத் தெரியாமல் தவிக்கும் நிர்வாகிகள்!
இடைத்தேர்தல் நெருங்குது... த.வெ.க. முடிவு என்ன? திக்குத் தெரியாமல் தவிக்கும் நிர்வாகிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Embed widget