மேலும் அறிய

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு

மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உடுமலை அருகே யானைகள் மீது கற்கள் வீசி தாக்கி துன்புறுத்திய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின அதில் குட்டி உட்பட 3 யானைகள் கொண்ட யானைக் கூட்டத்தின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்..  3 பேர் மீது வழக்கு

வளர்ப்பு நாய்களுடன் யானைகள் மீது கல் வீசுவது, கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குவது, தூரத்தி வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. குட்டி யானையை பாதுகாக்கும் நோக்கில் அதை விட்டு நகரவும் முடியாமல், இளைஞர்களை விரட்டவும் முடியாமல் யானைகள் பரிதவிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகளை துன்புறுத்தும் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்..  3 பேர் மீது வழக்கு
காட்டை பாதுகாக்கும் பழங்குடிகளே யானைகளை துன்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், யானைகளை துன்புறுத்திய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யானைகளை துன்புறுத்திய செல்வம், காளிமுத்து அருண்குமார் ஆகிய 3 பேர் மீது உடுமலை வனத்துறையினர் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 3 பேரையும் கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானைகளை துன்புறுத்தும் வீடியோவில் அடையாளம் தெரிந்த  3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்தால்தான் யானைகளை துன்புறுத்திய மற்ற நபர்கள் குறித்த விபரம் தெரியவரும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர். இதற்கிடையே திருமூர்த்தி மலைப்பகுதியில் இளைஞர்கள் யானைகள் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் குட்டி உட்பட 3 யானைகள் மீது இளைஞர்கள் கற்கள் வீசி தாக்கிய காட்சிகளும், ஆத்திரமடைந்த யானைகள் இளைஞர்களை தூரத்தி வரும் காட்சிகளும், தூரத்தில் வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து தாக்கி விரட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்..  3 பேர் மீது வழக்கு
 
இதுகுறித்து வனம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், "திருமூர்த்தி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிக்குள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் வெறுப்பேற்றியுள்ளனர்.  தூரத்தி வரும் யானைகளை கூட்டமாக சேர்ந்து தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் யானைகளுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் ஏற்படவில்லை. யானைகளை தாக்கிய இளைஞர்கள் மீது வனத்துறை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்த போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்க்க சென்ற திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Lok Sabha Election Second Phase LIVE : சந்தோஷமா ஓட்டுப் போடுங்க.. அட்வைஸ் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
Lok Sabha Election Second Phase LIVE : சந்தோஷமா ஓட்டுப் போடுங்க.. அட்வைஸ் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Madurai Kallazhagar | வைகையில் இறங்கிதடம் பார்த்த கள்ளழகர் பக்தி பரவசத்தில் பக்தர்கள்Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Lok Sabha Election Second Phase LIVE : சந்தோஷமா ஓட்டுப் போடுங்க.. அட்வைஸ் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
Lok Sabha Election Second Phase LIVE : சந்தோஷமா ஓட்டுப் போடுங்க.. அட்வைஸ் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
Watch Video:
"அட கொடுமையே" சரக்கு வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் லக்கேஜ் - நேபாளத்தில் பரிதாபம்
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Vishal:
"அதிகார திமிரில் ஆடுறாங்க" - ரத்னம் பட விஷயத்தில் விஷாலுக்கு ஜெயக்குமார் ஆதரவு!
Fact Check : பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதா? உண்மைத் தகவல் என்ன?
பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதா? உண்மைத் தகவல் என்ன?
Embed widget