மேலும் அறிய

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு

மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உடுமலை அருகே யானைகள் மீது கற்கள் வீசி தாக்கி துன்புறுத்திய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின அதில் குட்டி உட்பட 3 யானைகள் கொண்ட யானைக் கூட்டத்தின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு

வளர்ப்பு நாய்களுடன் யானைகள் மீது கல் வீசுவது, கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குவது, தூரத்தி வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. குட்டி யானையை பாதுகாக்கும் நோக்கில் அதை விட்டு நகரவும் முடியாமல், இளைஞர்களை விரட்டவும் முடியாமல் யானைகள் பரிதவிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகளை துன்புறுத்தும் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு
காட்டை பாதுகாக்கும் பழங்குடிகளே யானைகளை துன்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், யானைகளை துன்புறுத்திய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யானைகளை துன்புறுத்திய செல்வம், காளிமுத்து அருண்குமார் ஆகிய 3 பேர் மீது உடுமலை வனத்துறையினர் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 3 பேரையும் கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானைகளை துன்புறுத்தும் வீடியோவில் அடையாளம் தெரிந்த  3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்தால்தான் யானைகளை துன்புறுத்திய மற்ற நபர்கள் குறித்த விபரம் தெரியவரும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர். இதற்கிடையே திருமூர்த்தி மலைப்பகுதியில் இளைஞர்கள் யானைகள் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் குட்டி உட்பட 3 யானைகள் மீது இளைஞர்கள் கற்கள் வீசி தாக்கிய காட்சிகளும், ஆத்திரமடைந்த யானைகள் இளைஞர்களை தூரத்தி வரும் காட்சிகளும், தூரத்தில் வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து தாக்கி விரட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு
 
இதுகுறித்து வனம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், "திருமூர்த்தி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிக்குள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் வெறுப்பேற்றியுள்ளனர்.  தூரத்தி வரும் யானைகளை கூட்டமாக சேர்ந்து தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் யானைகளுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் ஏற்படவில்லை. யானைகளை தாக்கிய இளைஞர்கள் மீது வனத்துறை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்த போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்க்க சென்ற திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? திருப்போரூர் மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget