மேலும் அறிய

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு

மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உடுமலை அருகே யானைகள் மீது கற்கள் வீசி தாக்கி துன்புறுத்திய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின அதில் குட்டி உட்பட 3 யானைகள் கொண்ட யானைக் கூட்டத்தின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு

வளர்ப்பு நாய்களுடன் யானைகள் மீது கல் வீசுவது, கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குவது, தூரத்தி வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. குட்டி யானையை பாதுகாக்கும் நோக்கில் அதை விட்டு நகரவும் முடியாமல், இளைஞர்களை விரட்டவும் முடியாமல் யானைகள் பரிதவிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகளை துன்புறுத்தும் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு
காட்டை பாதுகாக்கும் பழங்குடிகளே யானைகளை துன்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், யானைகளை துன்புறுத்திய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யானைகளை துன்புறுத்திய செல்வம், காளிமுத்து அருண்குமார் ஆகிய 3 பேர் மீது உடுமலை வனத்துறையினர் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 3 பேரையும் கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானைகளை துன்புறுத்தும் வீடியோவில் அடையாளம் தெரிந்த  3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்தால்தான் யானைகளை துன்புறுத்திய மற்ற நபர்கள் குறித்த விபரம் தெரியவரும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர். இதற்கிடையே திருமூர்த்தி மலைப்பகுதியில் இளைஞர்கள் யானைகள் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் குட்டி உட்பட 3 யானைகள் மீது இளைஞர்கள் கற்கள் வீசி தாக்கிய காட்சிகளும், ஆத்திரமடைந்த யானைகள் இளைஞர்களை தூரத்தி வரும் காட்சிகளும், தூரத்தில் வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து தாக்கி விரட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குட்டியானைகளை கல்வீசி தாக்கிய இளைஞர்கள்.. பதைபதைக்க வைக்கும் இழிசெயல்.. 3 பேர் மீது வழக்கு
 
இதுகுறித்து வனம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், "திருமூர்த்தி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிக்குள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் வெறுப்பேற்றியுள்ளனர்.  தூரத்தி வரும் யானைகளை கூட்டமாக சேர்ந்து தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் யானைகளுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் ஏற்படவில்லை. யானைகளை தாக்கிய இளைஞர்கள் மீது வனத்துறை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்த போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்க்க சென்ற திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget