மேலும் அறிய

Disproportionate Assets: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; "பழிவாங்கும் எண்ணத்தில் விசாரிக்கக் கூடாது" - ஆர்.எஸ். பாரதி

"சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்தார்"

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது சென்னை உயர் நீதிமன்றம்.

சிக்கலில் அமைச்சர்கள்:

இது தொடர்பான வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அமைச்சர்களான பிறகு, வழக்கை முடித்து வைக்குமாறு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இதை ஏற்று, எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் விடுவித்தது. ஆனால், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தோண்டி எடுக்கப்படும் சொத்துக்குவிப்பு வழக்கு:

இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு அளவுகடந்த நம்பிக்கை உள்ளதாக கூறினார். வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள திமுக அமைச்சர்கள் தயார்.

ஏற்கனவே, முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் ஏராளமானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி நல்ல தீர்ப்பை பெற்றுள்ளோம். அதே  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

"பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது"

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3,600 கோடி ரூபாய் டெண்டர் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். உடனடியாக  உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தடை வாங்கியதால் மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது.

3,600 கோடி ரூபாய் வழக்கில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கூறும் அதே நீதிபதிதான் தற்போதைய வழக்கில் நேரத்தை வீணடிக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்தார். 

இந்த விமர்சனத்தை மேற்கொண்ட அதே நீதிபதி இரண்டு வாரங்களுக்கு பின் தனது நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளார். வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget