![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dilip Kannan Quits BJP: என்னை திட்டும் முன் யோசிங்க: தமிழ்நாடு பாஜக ஐ.டி விங் மாநில செயலாளர் ராஜினாமா!
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Dilip Kannan Quits BJP: என்னை திட்டும் முன் யோசிங்க: தமிழ்நாடு பாஜக ஐ.டி விங் மாநில செயலாளர் ராஜினாமா! Dilip Kannan Quits BJP TN BJP IT Wing State Secretary Resigned From BJP After Criticising Annamalai Dilip Kannan Quits BJP: என்னை திட்டும் முன் யோசிங்க: தமிழ்நாடு பாஜக ஐ.டி விங் மாநில செயலாளர் ராஜினாமா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/492d09483468bdd7cbb67077d63ff1701678097426148572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார். தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவனை முதலில் காலி செய்தார்.
அடுத்து பேராசிரியர் சீனிவாசன். மாநில பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள்.அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு.. தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.. அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் அவருக்கு சின்ன பிரச்சினை வருது அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகணபதியை அசிங்கப்படுத்தினார்..
அடுத்து நயினார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது, இவர் வந்து தான் எல்லாம் நடந்த மாதிரி. இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்.
பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள் என செய்தி அனுப்பினால், அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்வது இல்ல. சட்ட உதவி செய்பவனை ஏன் செய்கிறனேன்னு மிரட்டல் விடுறது. பாஜக தலைவராக முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா??
நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100% உழைத்திருக்கேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனால் பாஜக தொண்டர்கள் இடையே மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)