மேலும் அறிய

ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை பணியில் ஈடுபட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்

ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயியாகவே மாறி நேரடியாக வயலில் இறங்கி நெல் அறுவடை செய்தது, இதுவே முதன் முறை என்று கூறி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி கிராமத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள நெல் பயிர் அறுவடை பரிசோதனை திடல்களை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி  நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாயின் நிலத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயிர் அறுவடை பரிசோதனை திடல் தேர்வு வயல்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலர் பதிவேடு மற்றும் வேளாண்மை துறையினரின் படிவங்களை ஆய்வு செய்தார்., இதில் விவசாயி ஆறுமுகம் என்பவரது விவசாய நிலத்தில் தேர்வு செய்யப்பட்ட பரிசோதனை திடலை ஆய்வு செய்தார்.
 

ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை பணியில் ஈடுபட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்
 
அப்பொழுது திடீரென விவசாயிகளுடன் தீர்ந்து ஆட்சியரும், நெல் அறுவடையில் கலந்து கொண்டு நெற்கதிர்களை அறுவடை செய்தார். தொடர்ந்து ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இணைந்து நெல் அறுவடைசெய்தது அனைத்து விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயியாகவே மாறி நேரடியாக வயலில் இறங்கி நெல் அறுவடை செய்தது, இதுவே முதன் முறை என்று கூறி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
 

ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை பணியில் ஈடுபட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்
 
அதனைத் தொடர்ந்து, அறுவடை செய்யப்பட்ட  நெல் பயிரில் நெல் மகசூல் விபரத்தினை எடையிட்டு, எடையின் அளவினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட பரிசோதனை திடல் விவசாயி ஆறுமுகம், வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா, வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் செளமியன், பயிர் காப்பீட்டு திட்ட வேளாண்மை அலுவலர் தேவி, மொரப்பூர் வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி  உயிரிழப்பு 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி  உயிரிழந்தனா். அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி வட்டம், உரிகம் பகுதியைச் சோ்ந்த சிவமாதன் மகன் சிவா (21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் சின்னராஜ் மகள் அபிநயா (18). இவா்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
 

ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை பணியில் ஈடுபட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்
 
இந்த நிலையில் உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தாா். அப்போது, அங்கு உள்ள தடுப்பணை குட்டையில் அபிநயா குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கினாா். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஞ்செட்டி போலீஸாா்  சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget