மேலும் அறிய

3 இளைஞர்களின் காலை துண்டித்து, கொலைவெறி தாக்குதல்; நடவடிக்கை கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்

தொப்பூர் அருகே மூன்று இளைஞர்களை தாக்கி, ஒருவரின் கால் துண்டித்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல்:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக, மூன்று இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு கால் துண்டிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் பட்டியல் சமூகத்தை சார்ந்த ஜீவா(17), தமிழ்செல்வன்(17) என்பதும் மற்றொருவர் சசிதரன்(17) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விபத்தில் சந்தேகம்:

இந்த சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் கழித்து ஜீவா, தமிழ்செல்வன், சசிதரன் மூன்று பேரும், காதல் விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதாகவும், இதில் ஜீவாவை 4 பேர் சாலையோரம் இருந்து மறைவான பகுதிக்கு எடுத்துச் சென்று கடுமையாக தாக்கி காலை வெட்டி துண்டித்துதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த மூன்று இளைஞர்கள்  மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை, காவல்துறை உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்,  தமிழ் புலிகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் படுகாயமடைந்த மூவரில் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக, வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால் இது விபத்து வழக்கு என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜீவா கருத்து:

ஆனால் கால் துண்டிக்கப்பட்ட ஜீவா தெரிவித்துள்ளதாவது, நாங்கள் மூவரும் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்றோம். அங்கே தமிழ்ச்செல்வன் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனை கண்டு அவரது உறவினர்கள் துரத்தி வந்தனர். அப்பொழுது கீழே விழுந்த எங்களை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தன்னை மட்டும் பயங்கரமாக தாக்கி காலை வெட்டி துண்டித்தனர் என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்:

இந்நிலையில் 3 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் அமைப்பு, இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட காவல்துறை பட்டியல் சமூக இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும்,  படுகாயமடைந்த இளைஞர்களை உரிய முறையில் விசாரணை நடத்த மறுப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கோரிக்கை:


3 இளைஞர்களின் காலை துண்டித்து, கொலைவெறி தாக்குதல்; நடவடிக்கை கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்

 பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த படுகாயமடைந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தினர். இதன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் வரை சென்று நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Embed widget