மேலும் அறிய

கடலூர் எம்.பி டிஆர்வி ரமேஷ் மீதான கொலை வழக்கு - ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

விருத்தாசலம் கிளைசிறையில் உள்ள நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தராஜன் ஆகிய சிறையில் உள்ள 5 ஊழியர்களை விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

*கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு -ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு நாளை ஒத்திவைப்பு -கொலை வழக்கில் சிறையில் உள்ள 5 ஊழியர்களை 2 நாள் விசாரிக்க கோரி சிபிசிஐடி மனு*
 
கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் என்பவர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். முதலில் இந்த வழக்கானது காடம்புளியூர் காவல்துறை சார்பில் விசாரித்து வந்த நிலையில், அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர், 

கடலூர் எம்.பி டிஆர்வி ரமேஷ் மீதான கொலை வழக்கு - ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
 
விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் எம்பி ரமேஷை தவிர மற்ற 5 பேர் கைது செய்யபட்டு கடந்த 5 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். பின் கடந்த 11 ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் நீதிபதியின் உத்தரவின்பேரில் எம்பி ரமேஷ் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
 
பின் சிறைச்சாலையில் இருந்து கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி கோரியிரந்த நிலையில் நீதிபதி பிரபாகரன் அவர்கள் சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில், கடலூர் சிபிசிஐடி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ADSP கோமதி மற்றும் 3 ஆய்வாளர்கள் தலையில் விசாரணை செய்யப்பட்டது 3 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், 
 
பின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அவர்கள் எம்பி ரமேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி திமுக எம்பி ரமேஷின் வழக்கறிஞரான சிவராஜ் என்பவர் கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடத்தப்படும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது, அதில் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கொலை வழக்கில் கைது விருத்தாசலம் கிளைசிறையில் உள்ள நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தராஜன் ஆகிய சிறையில் உள்ள 5 ஊழியர்களை சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாள் விசாரிக்க கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Train service canceled : தமிழகத்தில் இனி இந்த 2 ரயில்கள் ஓடாது.! வேளாங்கண்ணி, நாகை மக்களுக்கு ஷாக் கொடுத்த தெற்கு ரயில்வே
தமிழகத்தில் இனி இந்த 2 ரயில்கள் ஓடாது.! வேளாங்கண்ணி, நாகை மக்களுக்கு ஷாக் கொடுத்த தெற்கு ரயில்வே
TN Election 2026: ”எனக்கும் அதே ரூல் தான்!” தேர்தல் நேரத்தில் திருப்பத்தூர் ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
TN Election 2026: ”எனக்கும் அதே ரூல் தான்!” தேர்தல் நேரத்தில் திருப்பத்தூர் ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Embed widget