Net Banking Scam : உஷார் மக்களே... இந்த லிங்கையெல்லாம் கிளிக் செய்யாதீங்க! வீடியோவில் அலெர்ட் செய்யும் டிஜிபி
வங்கி கணக்கை அப்டேட் செய்யக் கூறி ஆன்லைன் மோசடி நடைபெறுவது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
![Net Banking Scam : உஷார் மக்களே... இந்த லிங்கையெல்லாம் கிளிக் செய்யாதீங்க! வீடியோவில் அலெர்ட் செய்யும் டிஜிபி Crime Be ware of net banking scam If you respond to message entire bank balance is stolen Net Banking Scam : உஷார் மக்களே... இந்த லிங்கையெல்லாம் கிளிக் செய்யாதீங்க! வீடியோவில் அலெர்ட் செய்யும் டிஜிபி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/3ca7819fcc83976774b73692abae58cf1669266032126571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Net Banking Scam : வங்கி கணக்கை அப்டேட் செய்யக் கூறி ஆன்லைன் மோசடி நடைபெறுவது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.
நூதன முறையில் மோசடி
பல்வேறு வகையில் ஹேக்கிங் செய்து வங்கி தகவல்களை திருடி பணத்தை நமக்கே தெரியாமல் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுரண்டுவது போன்ற புது புது வழிகளில் திருடர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வங்கி கணக்கை அப்டேட் எனக் கூறி மெசேஜ் செய்து அதன் மூலம் பணத்தை தேடி வருகின்றனர். இந்த மோசடி தற்போது தமிழ்நாட்டில் அரகேறி வருவதாக கூறப்படுகிறது.
வங்கி மூலம் மோசடி
வங்கி கணக்கு மூலம் மோசடி தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஸ்மார்ட் போனில் நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் இழந்து விடுவதாக கூறப்படுகிறது. வங்கி மூலம் மோசடியில் மொபைல் போன்களுக்கு வங்கி கணக்கை அப்டேம் செய்ய கூறி ஒரு மெசேஜ் வரும். அதில் இணைப்பை கிளிக் செய்யுங்கள், மேலும தகவல்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என அனுப்பப்படும்.
அந்த எஸ்எம்எஸ் ஒரு மோசடி என தெரியாமல் கிளிக் செய்த பலர் தங்கள் வங்கி கணக்கு விவரங்கள், பன் கார்டு நம்பர் போன்றவற்றை தெரியப்படுத்துகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை இழந்துவிடுகின்றனர்.
டிஜிபி அறிவுறுத்தல்
இந்நிலையில், இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்று வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் பல்வேறு விதமான மோசடிகளை பார்த்து வைத்திருப்பீர்கள். தற்போது அது உருமாறி மீண்டும் வங்கி தொடர்பான மோசடிகள் மூலம் பணத்தை இழக்கும் ஆபத்து வந்திருக்கிறது என்று தெரிவித்தார். வங்கி கணக்கை அப்பேட் செய்யக் கூறி மோசடி நடைபெறுகிறது என்றார்.
மேலும், இது தொடர்பாக எந்த ஒரு தகவல்களும் வங்கியில் இருந்து வராது எனவும் தங்களுக்கு வரும் மெசெஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். இதுபோன்ற லிங்கை கிளிக் செய்து உங்களது பணத்தை இழந்து விட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)