CM Vijay: வித்யா இருந்திருக்கலாம்.. முதல்வர் விஜய் வாழ்க்கையில் சொல்ல முடியாத வலி!
எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் விஜய் என சொல்லும்போது ஒரு குடும்ப உறுப்பினராக மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் தான் என விமலா ராணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதனைக் காண தங்கை வித்யா இருந்திருக்கலாம் என அவரது முறைப்பெண் விமலா ராணி தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இது ஒட்டுமொத்தமாக தமிழக மக்களிடையே ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். அந்த வகையில் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தபோதே தங்கள் வீட்டில் ஒருவராக விஜயை மக்கள் பாவித்தனர். அப்படியிருக்கும்போது தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார். இந்த நிலையில் விஜயின் முறைப்பெண் விமலா ராணி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அதில், “எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் விஜய் என சொல்லும்போது ஒரு குடும்ப உறுப்பினராக மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் தான். விஜய் கடவுளுக்கும், மக்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறார். வீட்டில் விஜய் மிகவும் அமைதியாக தான் இருப்பார். ஒவ்வொரு படத்துலேயும் அவர் கேரக்டராக வரும்போது அதனுடைய அர்ப்பணிப்பை முழுமையாக கொடுப்பார்” என தெரிவித்தார்.
View this post on Instagram
தொடர்ந்து அவரிடம் விஜய் தங்கை புகைப்படம் காட்டப்பட்டது. அதுதொடர்பாக பேசிய விமலா ராணி, “நான் அப்போது சின்ன பொண்ணு தான். எங்க அண்ணன் பிறந்தநாள் அன்று தான் வித்யா இறந்தாள். அவள் ரொம்ப கஷ்டப்பட்டாள். உடல்நலப் பிரச்னைக்கு நிறைய சிகிச்சை கொடுக்கப்பட்டது. எங்களுக்கு இன்றைக்கு வரை அந்த பாப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அப்படியென்றால் விஜயைப் பற்றி யோசித்து பாருங்கள். உடன்பிறந்தவர்கள் என்பது மிகப்பெரிய பலம். ஆனால் அந்த பலம் அவருக்கு இல்லை என்பது சொல்லமுடியாத கஷ்டம் தான். ஒரு தங்கையை இழந்த விஜய்க்கு இன்றைக்கு உலகமெங்கும் அவருக்கு பல தங்கைகளை கொடுத்துள்ளது.
அதேசமயம் அத்தை ஷோபா, வித்யா இறப்புக்குப் பின் விஜயுடன் நெருக்கமாக இருந்தார். அவர் மீது மிகப்பெரிய அன்பு செலுத்தினார். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். ஒரு விஷயம் பிடித்துவிட்டாலோ, சரியான விஷயமாக தெரிந்தாலோ அதை தட்டாமல் செய்து விடுவார்.
விஜய் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அவரின் அமைதி ஏதோ ஒன்றை ஆழமாக சிந்திக்க உதவுகிறது. ஹீரோவாக நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை செய்துவிட்டு இப்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார். முதலமைச்சரான பிறகு தலைவர்களை சந்தித்ததும் விஜயின் பணிவு என சொல்லலாம். நம் வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்பதை விட மற்றவர்களுக்கு என்ன நல்லதை விட்டுட்டு செல்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் விஜய் தலைவர்களை சந்தித்த விஷயத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என விமலா ராணி கூறியுள்ளார்.
விஜய் தன் தங்கை வித்யாவைப் பற்றி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். 1984ம் ஆண்டு வித்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அந்த நிகழ்வு தன்னை மிகப்பெரிய அளவில் மாற்றியதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















