மேலும் அறிய

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் அமைக்கப்படும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு கொரொன தடுப்பு நடவடிக்கைக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை , மாநகராட்சி அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அரசியல் நாகரிகம் கருதி எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு அமைச்சர்கள் அருகில் முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

கொரோனா தடுப்பு ஆலோசணைக் கூட்டம்

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,”கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் பகிரப்பட்டது. மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று வார் ரூம் தொடங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் எங்களிடம் அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகள் அரசுக்கு குறைவாகவே வருகிறது அதிகமான மருத்துவமனைகளும் அந்த மருந்தை பரிந்துரை செய்வதால் மக்கள் மையங்களில் குவிந்து வருகின்றனர். முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் 18 வயது முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு  தடுப்பூசி போடுவதற்கு 45 கோடி மதிப்பீல் 15 லட்சம்  தடுப்பூசிகள் வந்துள்ளது. கோவையில் படுக்கை வசதிகளைக் அதிகரித்து சித்தா, ஆயுர்வேதம் , ஹோமியோபதி உள்ளிட்ட  சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த அளவில் ஆக்சிசன் பயன்படுத்தி நோயாளிகளைக் சிறப்பாக மருத்துவர்கள் குணமாக்கி வருவது பாராட்டுகுரியது. அரசு மருத்துவனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் வைக்க போதிய வசதி இல்லை என்பதை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி என்னிடம் தெரியப்படுத்தினார். அதனால்  உடல்களைக் வைக்க  கூடுதல் இடங்களைக்  ஒதுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், ஆலோசணைக் கூட்டத்திற்கு முன்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராணுவப் பணிக்கு நாளை தேர்வு: புதுச்சேரி தேர்வு மையங்களின் பட்டியல் மற்றும் கட்டுப்பாடுகள் !
ராணுவப் பணிக்கு நாளை தேர்வு: புதுச்சேரி தேர்வு மையங்களின் பட்டியல் மற்றும் கட்டுப்பாடுகள் !
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமானது; முத்தரசன் பகிரங்கக் குற்றச்சாட்டு...
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமானது; முத்தரசன் பகிரங்கக் குற்றச்சாட்டு...
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
Embed widget