மேலும் அறிய

நாளை இரவு வாகனத்தில் போகலாமா... வேண்டாமா? கூடாது என்கிறது போலீஸ்; போகலாம் என்கிறார் அமைச்சர்... தீருமா குழப்பம்!

அமைச்சர் சேகர்பாபுவிடம் ஏபிபி நாடு சார்பில் கேட்ட போது, ‛‛ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில கோயில்கள் மட்டும்தான் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்; எல்லா கோயில்களும் அல்ல...’’

தீவிரமடையும் ஒமிக்ரான் காரணமாக, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நிறைய காட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், 

29.12.2021 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

செய்தி வெளியீடு எண்:197/12/2021, தேதி 28.12.2021 செய்திக்குறிப்பின் தொடர்ச்சியாக, இன் தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு. மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர. மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை அன்று முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



நாளை இரவு வாகனத்தில் போகலாமா... வேண்டாமா? கூடாது என்கிறது போலீஸ்; போகலாம் என்கிறார் அமைச்சர்... தீருமா குழப்பம்!

என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதுவரை எந்த குழப்பமும் இல்லை. ஆனால் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றும், புத்தாண்டு தரிசனம் செய்து கொள்ளலாம். சாமி தரிசனத்திற்கு தடையில்லை, தனி மனித இடைவெளி, முக கவசம் அணிந்து விதிகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும்,’ கூறியுள்ளார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. 

இரவு 12 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதியில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரவு 12 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சாமி தரிசனம் செய்யலாம் என்கிறார் அமைச்சர். இதில் எதை நம்பி, மக்கள் திட்டமிட முடியும் என்கிற குழப்பம் தான் அது. அமைச்சர் கூறிவிட்டார் என இரவில் தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றால், வீடு திரும்பும் போது கமிஷனர் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. அல்லது அபராதம் விதிக்கப்படலாம். இப்படி இரு வேறு இடியாப்ப சிக்கலில் பொதுமக்களை குழப்பும் விதமாக உள்ளது இந்த அறிவிப்புகள்.

தெளிவற்ற இந்த அறிவிப்புகள் குறித்து அரசு தரப்பில் தெளிவுபடுத்த  வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 


நாளை இரவு வாகனத்தில் போகலாமா... வேண்டாமா? கூடாது என்கிறது போலீஸ்; போகலாம் என்கிறார் அமைச்சர்... தீருமா குழப்பம்!

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் ஏபிபி நாடு சார்பில் கேட்ட போது, ‛‛ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில கோயில்கள் மட்டும்தான் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்; எல்லா கோயில்களும் அல்ல. அப்படி திறக்கப்படும் கோயில்களில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் சூழலுக்கு ஏற்ப சென்று தரிசிக்கலாம். கோயிலுக்கு போறது நல்ல விஷயம். உண்மையிலேயே கோயிலுக்கு போறவங்கள யாராவது தடுப்பாங்களா ?,’’ என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
Embed widget