கோவை, ஈரோடு, பல்லடம், சேலம், உடுமலைப்பேட்டை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம. அதன்படி நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், நாளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,
கோவை மின்தடை பகுதிகள்: பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம். பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு கொள்ளுபாளையம் பகுதி, ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ரராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.
ஈரோடு மின் தடை பகுதிகள்: தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ். சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, கம்புளியம்பாளையம், வற்றல்பாளையம்.
பல்லடம் மின் தடை பகுதிகள்: கண்ணபுரம், ஓலபாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம் மருதுரை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், வடபழனி பொன்னாங்கலிவலசு, மேட்டுப்பாறை, சடையபாளையம், சம்மந்தம்பாளையம் சின்னகோடாங்கிபாளையம், பெரியகோடாங்கிபாளையம், பீத்தாம்புச்சிபாளையம், ஏகரன்பாயம், சின்னக்கோவில்பிரிவு மருதுரை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், வடபழனி.
சேலம் மின்தடை பகுதிகள்: மில், அனத்தனப்பட்டி, டவுன் - I, டவுன் - II, டவுன் - III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்.
உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்: ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடீஸ், சிகோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பாறை.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.





















