CM Stalin: “தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல” - முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட் என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பெருமிதமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அதில், திமுக முப்பெரும் விழா, ‘ஓரணியில் தமிழ்நாடு‘ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திற்குப்பின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல”
முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல”-னு தமிழ்நாடே சொல்லும்!
நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் #முப்பெரும்_விழா-வுக்கு உங்கள் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
செப் 17 அன்று கரூரில் திரள்வோம்! கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல”-னு தமிழ்நாடே சொல்லும்!
— M.K.Stalin (@mkstalin) September 9, 2025
நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட… pic.twitter.com/lLQ6sdeBLg





















