மேலும் அறிய

CM Stalin Letter: ”தென்மாவட்ட மீட்பு பணிகளுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம்

CM Stalin Letter: தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அதிக ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் குடிக்க நீரின்றி, உணவின்றி, இருக்க இடமின்றி தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்து வருகின்றனர். 

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணும் என பல் துறை இணைந்து மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இன்று காலை முதல் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் மூலம் 4 கருவுற்ற பெண்களும் ஒரு குழந்தையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:

இந்நிலையில் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அதிக ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எங்கள் அதிகாரிகள், SDRF மற்றும் NDRF குழுக்களை நாங்கள் திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் மகத்தான தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் பாதுகாக்கப்படுவதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசர தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Embed widget