மேலும் அறிய

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடியவில்லை என சட்டப்பேரவை உரையின்போது கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், வரும் 9-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விவகாரம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

நீட் விவகாரம் குறித்து நடைபெற உள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்து, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவத் துறையில், நம் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மாநிலத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழகத்தின் அனைத்து தரப்பும் கூறி வருவதாகவும், நீட் தேர்வு வந்த பிறகு, ஏழை எளியவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லக்கூடிய வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இந்த தேர்வு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

நீட் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் உயர்நிலைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு, நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகும் ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மீண்டும் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பு வைக்கப்பட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், மத்திய அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கோரிய விளக்கங்களுக்கு உடனடியாக பதில் அனுப்பப்பட்டும், அவற்றையெல்லாம் ஏற்காமல், மத்திய அரசு நமது நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ள செய்தியை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்

மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம், ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை எனவும், போராட்டத்தில் அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

மேலும், இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம், வரும் 9-ம் தேதி மாலை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவித்த அவர், அதில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில், மருத்துவக் கனவோடு கல்வி பயிலும் லட்சக்கணக்கா மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
Embed widget