மேலும் அறிய

உயர்கல்விக்காக 12 ஆண்டு கால சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கியுள்ளார்.

கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் திரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர். அதேபோல மாணவ, மாணவிகள் தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி, மற்றவர்கள் நிதியுதவி அளிக்க தூண்டுகோலாக இருந்து வருகின்றனர். கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கியுள்ளார்.


உயர்கல்விக்காக 12 ஆண்டு கால சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலமுரளி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 17 வயது மகள் சுமரேகா காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெற்றோர்கள்அவ்வப்போது கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சி செய்திகளில் சுமரேகா பார்த்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை அளிக்க வேண்டுமென்ற முனைப்பில், உண்டியலில் சேமித்த பணத்தை கொடுக்க முன் வந்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சுமரேகா 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழங்கினார்.


உயர்கல்விக்காக 12 ஆண்டு கால சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

இதுகுறித்து சுமரேகாவின் தாயார் ரேணுகா கூறுகையில், “ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பது சுமரேகாவிற்கு சிறிய வயதில் இருந்து கனவாக இருந்து வருகிறது. தனது உயர்கல்விக்காக சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, நாங்கள் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். நிவாரண நிதி வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். கொரோனாவால் ஒரு உயிரைக் கூட இழக்கக்கூடாது என முதலமைச்சர் கூறியது சுமரேகா மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்  தனது சேமிப்பு பணத்தை வழங்க எங்களிடம் விருப்பம் தெரிவித்தார். அதன்பேரில் இன்று அமைச்சர்களிடம் நிதியுதவி அளித்தோம்” என அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்க விரும்புவோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை கிளை, AlcNo. 117201000000070, IFSC-IOBA0001172 என்ற முகவரியில் செலுத்தலாம்.

தலைப்பு செய்திகள்

Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் .. இபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை.. என்ன தெரியுமா?
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் .. இபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை.. என்ன தெரியுமா?
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
Fishermen Alert Weather Update: கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert Weather Update: கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Embed widget