மேலும் அறிய

CM Stalin: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 'தமிழ்நாடு வாழ்க' என்று கோலமிடுங்கள் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

செழிக்கட்டும் தமிழ்நாடு, சிறக்கட்டும் பொங்கல் திருநாள் என, முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஜனநாயக நெறியில்,  ”சட்டத்தின் மாண்பு காத்து  மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில்  நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன்  தமிழ்நாட்டின்  பொங்கல் விழா தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையின் மாண்பையும்,  தமிழ்நாட்டின் சுயமரியாதையையும்  காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான  போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால் , இந்த பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சக்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது.

 

அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும்  இடம்பெற்று,  அவர்களின் உள்ளமெல்லாம்  இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன்  பொங்கல் பரிசுத் தொகுப்பை  வழங்கியுள்ளது  திராவிட மாடல் அரசு. பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின்  தலைநகரான சென்னையில்  பொங்கல் விழாவையொட்டி,  தமிழர்களின்  கலைவிழாவாக  சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. தலைநகரில் மட்டுமின்றி,  தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட  தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும்  வீர விளையாட்டுகள்,  கலை விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக  நடைபெறத் தொடங்கியுள்ளன.

தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான  - தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும்  சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் இல்லத்தின்  வாயிலிலும் ”தமிழ்நாடு வாழ்க”   எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும்  தமிழ்நாடு, சிறந்தது  இனிக்கட்டும் பொங்கல் திருநாள். உலகெங்கும் வாழும்  தமிழர்களுக்கு  உங்களில்  ஒருவனான என்னுடைய,  இதயம் கனிந்த பொங்கல்  - தமிழர் திருநாள் வாழ்த்துகள்” என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இதோடு, போராட்டத்தை எதிர்கொண்டு மாநில உரிமையைச் சட்டமன்றத்தில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்குகிறது. ஒவ்வொருவர் இல்லத்தின் வாசலிலும் "தமிழ்நாடு வாழ்க" எனக் கோலமிட்டுத் தமிழர் திருநாளாம் தை முதல் நாளை வரவேற்போம் என, முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget