மேலும் அறிய

நம்ம சென்னையில இப்படி ஒரு திட்டமா? 3,100 கோடி திட்டத்தில் மாபெரும் மாற்றம்! குடிநீர் தட்டுப்பாடு இனி இல்லை?

Chennai Ring Main System: "சென்னை மாநகரின் குடிநீர் தேவையை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 9 முக்கிய குடிநீர் ஆதாரங்களை ஒன்றிணைக்கும் ரூ.3,108.55 கோடி மதிப்பிலான "ரிங் மெயின் சிஸ்டம்"

"சுமார் 3,100 கோடி ரூபாயில், சென்னையின் ஒன்பது குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது"

சென்னை குடிநீர் தேவை 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் நிறைந்திருப்பதால், சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 பட்ஜெட்டில் அறிவித்த குடிநீர் திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் குடிநீர் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றிச் சீராக வழங்க, நகரின் 9 முக்கிய குடிநீர் ஆதாரங்களை (Water Sources) ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காக "ரிங் மெயின் சிஸ்டம்" (Ring Main System - RMS) என்ற புதிய திட்டத்திற்குத் தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட திட்டம்

சென்னையின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிக முக்கிய திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இதை செயல்படுத்துவதற்காக சுமார், ரூ.3,108.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையின் 9 குடிநீர் ஆதாரங்கள் மற்றும் வரவிருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஆகியவை 98 கிலோமீட்டர் நீளமுள்ள இரும்பு (Mild Steel) குழாய்கள் மூலம் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் ?

நகரம் முழுவதும் ஒரு வட்டப் பாதை (Closed Loop) போன்ற குழாய் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் எந்த ஒரு நீர் ஆதாரத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மற்ற ஆதாரங்களில் இருந்து நீரைத் திருப்பி விட்டு தடையின்றி வழங்க முடியும், இதனால் சென்னை மாநகராட்சி குடிநீர் தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தற்போது சென்னை நகரில் நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 2057-ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை தேவையைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 1,762 மில்லியன் லிட்டர் நீரை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இத்திட்டம் SCADA (Supervisory Control and Data Acquisition) எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். நீரின் அழுத்தம், குழாயில் நீரின் ஓட்டம் மற்றும் தரம் ஆகியவற்றை சென்சார்கள் மூலம் உடனுக்குடன் கண்காணிக்க முடியும். இத்திட்டப் பணிகள் அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவடையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget