புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் போதைப் பொருள், செல்போன் பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும். புதிய வசதிகள் , சட்ட உதவி மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாடு

புழல் சிறையில் அமைச்சர் ஆய்வு
சென்னை புழல் சிறையில் சிறை
எண் ஒன்றில் 1,000 சிறை வாசிகளும் , சிறை எண் இரண்டில் 3,000 சிறை வாசிகளும் பெண்கள் சிறையில் 200 பேரும் மொத்தமாக 4,000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ள நிலையில்
புழல் சிறையில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்
சிறைத் துறை அதிகாரிகளுடன்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
அங்குள்ள பேட்டரி வாகனத்தில்
பயணித்தும் சிறையில் ஆய்வு செய்த அவர் , சிறை வாசிகளின் குறைகள் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் சிறையில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார்
பின்னர் செய்தியாளர்களிடம். பேசுகையில் ;
புழல் சிறையில் 4,000 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில் கைதிகளை காண வரும் பார்வையாளர்கள் நாள் தோறும் 200 - க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் , மருத்துவ வசதி , பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் , சிறையில் நீண்ட காலமாக இருக்கும் கைதிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனை குழு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு கேமரா , ஜெனரேட்டர் வசதி , குடிநீர் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்திற்குள் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
போதைப் பொருள் , செல்போன் பயன்படுத்தாத அளவிற்கு முழுமையான நடவடிக்கை
புழல் சிறையில் போதைப் பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது. சிறை வாசிகளை ஸ்கேனிங் செய்யும் வசதியும் , பார்வையாளர்களை அவர்கள் கொண்டு வரும் பொருட்களை ஸ்கேனிங்
செய்து வருகின்றனர். செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தாத வகையில் முழுமையான நடவடிக்கை மேற் கொள்ள உள்ளோம்.
சிறைத் துறை மற்றும் மின் வாரியங்களில் பணிபுரிவர்களை இடம் மாற்றம் தேவையில்லாமல் செய்யக் கூடாது. புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கைதிகள் கொண்டு செல்வதாகவும் கேன்சர் , கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. சிறையில் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த உள்ளோம்.
உள்நோக்கத்தோடு பணி புரியும் ஊழிர்கள் பணியிடை மாற்றம்
மின்சார வாரியம் பொது மக்களுக்காகவே உள்ளது. 100 சதவீதம் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணி செய்கிறார்கள். ஊழியர்கள் தவறு செய்யும் இடத்தை குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பகல் பார்க்காமல் ஊழியர்கள் பணி செய்து மின்வெட்டை சரி செய்து வருகின்றனர். மெத்தனமாக உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற கட்டிடங்கள் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















