![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‛தடுப்பூசி போட ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது’ வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட கட்டாயபடுத்த கூடாது என உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
![‛தடுப்பூசி போட ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது’ வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்! Chennai High Court dismissed petition seeking restraining teachers staff from getting Covid 19 vaccine ‛தடுப்பூசி போட ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது’ வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/738abf29eca110e4d63c7d7487d085c1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா தடுப்பூசி போடாமல் பொது இடங்களுக்கு செல்வது குறித்து ஏற்கெனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பொது வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கட்டாயபடுத்த கூடாது என மத்திய அரசு அறுவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட வயதை கடந்த மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதனை எதிர்த்து அறம் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேவசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தாதத நிலையிலும், சிலர் இயற்கை மருத்துவத்தை நாடும் நிலையிலும் தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் படிக்க : தடுப்பூசி போட்டா தியேட்டருக்கு வாங்க.. டிக்கெட் பணம் ரிடர்ன் இல்ல - புதிய ரூல்.!
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும், சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பபடாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)