மேலும் அறிய

"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது மகளிர் நீதிமன்றம்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மகளிர் நீதிமன்றம்.

கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்டு இளம்பெண் சத்யா என்பவர் கொலை செய்யப்பட்டார். சதீஷ் என்ற இளைஞர், அவரை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சத்யாபிரியா கொலை வழக்கு:

பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சதீஷ்(23). அதே காவலர் குடியிருப்பில்தான் சத்யாபிரியா என்ற கல்லூரி மாணவியும் வசித்து வந்திருக்கிறார். சத்யாபிரியா, சதீஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால், பெற்றோரின் எதிர்ப்பால் சதீஷிடம் பேசுவதை சத்யா நிறுத்தி கொண்டதாக கூறப்பட்டது. 

இதற்கிடையே, கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்தார் சத்யபிரியா. அங்கு நின்றிருந்த சதீஷ், அவரிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் தாம்பரம் நோக்கி சென்ற ரயில் முன் சத்யபிரியாவை சதீஷ் தள்ளிவிட்டார்.

மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

இதில், சம்பவ இடத்திலேயே சத்யபிரியா உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, சதீஷை கைது செய்தனர். பின்னர், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த 24ஆம் தேதி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. சதீஷை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்கள், பின்னர் தெரிவிக்கப்படும் என கூறியது.

அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget