மேலும் அறிய

"எங்கப்பாவுக்கு மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது" விமான சாகச நிகழ்ச்சியில் தந்தையை பறிகொடுத்த இளைஞர் கண்ணீர்

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் தந்தையை பறிகொடுத்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு நிகழ்ந்தது போல யாருக்கும் இனி நிகழக்கூடாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி நேறறு முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மொத்தம் 15 லட்சம் பேர் கண்டுகளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 பேர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுமக்கள் ஆத்திரம்:

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் சென்று பார்ப்பதற்கு முறையான போக்குவரத்து வசதிகளும், திரும்பி வருவதற்கான போக்குவரத்து வசதிகளும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், மதிய வேளையில் கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாத காரணத்தால் ஏராளமானோர் மயக்கம் அடைந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்து தரப்படாத காரணத்தால் பொதுமக்கள் பலரும் ஆத்திரம் அடைந்தனர். அரசின் அலட்சியமே மக்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அப்பா என்றால் சம்பாதிக்க மட்டும்தானா?

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்பாபு என்பவரின் மகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “  நான் சென்று பார்த்தபோது எனது அப்பாவை பீச்சில் உள்ள ப்ளாட்பாரமில் படுக்க வைக்கப்பட்டு இருந்தார். அங்கிருந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இங்கு வந்து சேர்த்தபோது மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

அப்பா என்றாலே சப்போர்ட்தான். அது எந்த சப்போர்ட் என்று சொல்ல முடியுமா? ஒரு அப்பா என்றால் சம்பளம் மட்டும்தானா? அனைத்திற்கும்தானே. அவர் பேரன், பேத்திகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அவரை கொடுக்க முடியுமா? எங்கப்பா மாதிரி இனி யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லை:

மேலும், ஜான் பாபுவின் உறவினர் ஒருவர் கூறும்போது, தண்ணீர் பாட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு பாட்டில் வாங்கவே மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஒரு பாட்டில் ரூபாய் 60, 70 என்று விற்கிறார்கள். விற்பது கூட பிரச்சினை இல்லை. தண்ணீர் கிடைக்க வேண்டுமே?

இவரை மெயின் ரோட்டிற்கு அழைத்து வரவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது. 2.30 மணிக்கு இந்த நிகழ்வு நடந்தது. 3 மணி வரை ஆம்புலன்ஸ் வரவே இல்லை. 3 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 4 மணிக்குத்தான் வருது. ஏர்போர்ஸ் ஷோ எல்லாம் ஓகே. ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒரு தனி வழி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், எதுவுமே செய்யவில்லை. கடற்கரையின் தாங்கும் சக்தியே 3 லட்சம் வரைதான் இருந்தது. காணும் பொங்கலுக்கு வரும் ஆய்வு அறிக்கைப்படி சொல்கிறேன். 13 லட்சம் பேர் வரை வந்துள்ளனர். அப்போது, அதற்கு ஏற்றாற்போல செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget