![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
செங்கம் அருகே விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் சரக காவல் துறை துணை தலைவர்
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
![செங்கம் அருகே விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் Chengam accident Deputy Superintendent of Police Vellore personally inspected the areas where the accident place TNN செங்கம் அருகே விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் சரக காவல் துறை துணை தலைவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/a5d6aa9cb4d1020d709b71663a51d0631698155715460113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செங்கம் பகுதியில் உள்ள பெங்களூரு நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துகளை தடுப்பது குறித்து வடக்கு மண்டல வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கருமாங்குளம் அருகே அசாம் மாநில இளைஞர்கள் 11 பேர் காரில் பெங்களூர் நோக்கி சென்ற கொண்டு இருக்கும் போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் மேல் செங்கம் கருமாங்குளம் அருகே டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த 6 இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்பலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 இளைஞர்களை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி இறந்த இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள நெலமங்கலாவில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அதன் அருகில் அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும் , விபத்து ஏற்பட்ட பல பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விபத்திற்கான காரணங்களை கேட்டறிந்தும் இனி விபத்து நடக்காமல் இருக்கும் வகையில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இரவு நேரங்களில் ஒளிரும் பதாகைகளும் ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தொலைவில் சாலையின் குறுக்கே மின்னும் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை பணியாளர்களுக்கு வடக்கு மண்டல வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)