மேலும் அறிய

புதுச்சேரியில் மே 7 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: தவறான தகவல் அளித்தால் அபராதம் - ஆட்சியர் எச்சரிக்கை!

கணக்கெடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, தவறான தகவல்களை வழங்குவது அல்லது அலுவலர்களை அனுமதிக்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்!

புதுச்சேரி: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டப் பணிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விரைவில் தொடங்கவுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக தாங்களாகவே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள் வெளி விட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை மூலம், கடந்த 25-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியாகும்.  இந்த தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. சுய கணக்கெடுப்பு மக்கள் தொகைகணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுவை யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். 

பொதுமக்கள் தங்களே sE.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு, வருகிற மே 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும். ஜூன் 1-ந் தேதி முதல் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணியை ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின் பின் போது எட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் சேகரிக்கப்படும். 

1948 மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். 

தேவையானபோது கணக்கெடுப்பு படிவங்களை சரியாக மாற்றி வழங்க வேண்டும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் வழக்குகளில் சான்றாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது உறுதியாக அறிவிக்கப்படுகிறது. அபராதம் கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல் வழங்குவது. அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். 

இத்தகைய விதி மீறல்களுக்கு ரூ.1000-ம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து மக்களும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று பணிகள் வெற்றிகரமாக நடைபெற துல்லியமான தகவல்களை ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget