மேலும் அறிய

 தண்ணீர் மட்டும் குடித்து 'சஷ்டி விரதம்' இருக்கலாமா?

உண்மையில் இறைவன் கேட்பது என்ன அனைத்து புராண கதைகளில் இருந்தும் நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான் அவை பக்தி

 தண்ணீர் மட்டும் குடித்து 'சஷ்டி விரதம்' இருக்கலாமா? 


அன்பார்ந்த வாசகர்களே விரதம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்... உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, மௌனமாக விரதம் இருப்பது, ஒருவேளை மட்டும் உணவு உண்பது காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையான உணவு கட்டுப்பாடுடன் விரதம் இருப்பது, பிற சத்தங்களை வெளியில் கேட்காமல் விரதம் இருப்பது இப்படியாக விரதங்கள் பல வகைகளில் உள்ளது இவை அனைத்துமே வெளி உலக தொடர்பை துண்டிப்பது... இப்படியாக தியாகம் செய்து இறைவனுக்காக நம்மை வருத்தி விரதம் இருந்தால் இறைவன் நாம் கேட்ட வரங்களை கொடுப்பார் என்பது ஐதீகம்... ஆனால் உண்மையில் இறைவன் கேட்பது என்ன அனைத்து புராண கதைகளில் இருந்தும் நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான் அவை பக்தி... பக்தி ஒன்று மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களோடு நம்மை இணைக்கும்... இறைவனோடு நாம் மனதார பக்தி செலுத்தி சேர்ந்தால்.... இறைவன் நம்மோடு சேர்வார் என்பது தான் அதன் தார்பரியம்.... 


சஷ்டி விரதம் இருப்பவர்கள் தற்பொழுது கடுமையாக தண்ணீர் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கிறார்கள்... அதே போல மிளகு விரதம் என்று ஒன்று வந்திருக்கிறது... அவையும் ஒரு நாளைக்கு ஒரு மிளகு... இரண்டாவது நாளைக்கு இரண்டாவது மிளகு... என்று ஆறு நாட்கள் எதையுமே சாப்பிடாமல் மிளகு மட்டும் சாப்பிட்டு... உயிர் வாழ்வது என்று மக்கள் கடுமையான முறையில் சிலர் விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.... ஆனால் என்னுடைய பார்வையில் உங்களுடைய உடலை அவ்வாறு வருத்திக்கொண்டு... எந்த கடவுளும் பக்தி செலுத்த சொல்ல மாட்டார்... மாறாக ஒருவேளை உணவை தியாகம் செய் அல்லது இருவேளை உணவை தியாகம் செய் என்று நீங்களாக அவருக்கு செய்து பக்தி செலுத்தினால்... அது உங்களுக்கு திருப்தியானதாக... இறைவன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என்று எடுத்துக் கொண்டால் செய்யலாம்...

 அவ்வாறு இஸ்லாமியர்கள் கூட சூரியன் உதிக்கும் முன்பாக விரதத்தை தொடங்கி விடுவார்கள் சூரியன் மறைந்த பின்பு தான் விரதத்தை முடிப்பார்கள்... கிட்டத்தட்ட இது ஒரு கடுமையான விரத முறை... இதுபோல மனிதனால் இருக்க முடியும் ஆனால் தெய்வம் நான் உங்களுக்கு ஒன்று கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு இவையெல்லாம் தர வேண்டும் என்று கேட்க மாட்டார்... மாறாக உண்மையான அன்பை என் மீது நீ செலுத்தினால் உன்னை தீங்கிலிருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவேன் என்று தெய்வங்கள் உறுதியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...

 கந்த சஷ்டி விரதத்தை பொருத்தவரை மனதார தெய்வத்துக்கு நீங்கள் இருந்தால் தெய்வம் உங்களுக்கு தேவையான அனைத்து நல்லவைகளையும் செய்யும்.. என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று சொல்லுவார்கள் அதாவது சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு நல்ல புத்தக பேரு கிடைக்கும் என்றும் பெண்களாக இருக்கும் பட்சத்தில் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார் என்பதும் காலம் காலமாக நாம் கடைபிடித்து வரக்கூடிய ஒரு அமைப்பு... இந்த அமைப்பின்படி ஆறு நாட்கள் நீங்கள் விரதம் இருக்கலாம் உங்களுடைய உடல் நலத்திற்கு ஏற்றார் போல் விரத முறைகளை கடைபிடியுங்கள் நிச்சயமாக முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்....

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சம்பள உயர்வுக்கு ரெடியா இருங்க!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சம்பள உயர்வுக்கு ரெடியா இருங்க!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
Embed widget