மேலும் அறிய

AIADMK Madurai Meeting LIVE:தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் - மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

AIADMK Madurai Meeting LIVE Updates: மதுரை வலையங்குளத்தில் அதிமுகவின்  பொன்விழா எழுச்சி மாநாடு  நடைபெற்று வருகிறது.

LIVE

Key Events
AIADMK Madurai Meeting LIVE:தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் - மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Background

மாநாடு பணிகள் தீவிரம்:

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின்,  மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக வலையங்குளம் அருகே ரிங்ரோடு பகுதியில் பரந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை சீர்படுத்தி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பணிகளை மேற்பார்வை செய்தனர். எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் அங்கேயே தங்கியிருந்த இப்பகுதிகளை மேற்கொண்டதாகவும், எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

 

பிரமாண்ட முகப்பு:

மாநாடு நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகப்பானது கோட்டை போன்றும், அதில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளனர். அதற்கு கீழே எடப்பாடி பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான இருக்கைகள் போடப்பட்டன. மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் பணிகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளன.

குவிந்த தொண்டர்கள்:

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் நேற்று காலை முதலே மதுரைக்கு வர தொடங்கினர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் இருந்து அ.திமு.க. தொண்டர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் நேற்று காலை மதுரை சென்றது. அந்த ரயில் கூடல்புதூர் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து உற்சாகமாக இறங்கிய தொண்டர்கள் பின்னர், தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். தொண்டர்களின் படையெடுப்பால், மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன. லட்சக்கணக்கில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களுக்கு, கட்சி சார்பில் இன்று சைவ விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் போர்டபிள் செல்போன் டவரும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் விவரம்:

மாநாட்டு திடல், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சைவ உணவு பரிமாறப்படுகிறது. அதற்காக 150-க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவு தயாரிக்கும் பணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர்  மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காய்கறிகள் நறுக்கும் பணி, விதவிதமான உணவுகள் சமைக்கும் பணி என தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவு வழங்கப்படும் பந்தலில் நெரிசல் இன்றி தொண்டர்களுக்கு பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும் போதிய ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வரவேற்பு ஏற்பாடு:

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8.45 மணிக்கு, அதிமுக தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக சுமார் 51 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எடப்பாடி பழனிசாமி மாநாட்டு பந்தலுக்கு வரும்போது உயரத்தில் இருந்து பூக்கள் தூவுவதற்காக, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மாநாட்டு திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  கொடியேற்றுதலுக்கு பிறகு ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள்:

பின்னர், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த கண்காட்சி அரங்கத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன. மாநாட்டு திடலில், கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் என தொடர்ந்து நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஈபிஎஸ் தலைமை உரை:

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். செல்லூர் ராஜூ உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசுகின்றனர். மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை நிகழ்த்துகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார். அதன்பின் நன்றியுரையுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. 

19:19 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ. 10 கோடி முறைகேடு நடக்கிறது - எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ. 10 கோடி முறைகேடு நடக்கிறது. முறைகேடு பார்களில் கலால் வரி செலுத்தாமல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

18:47 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: புரட்சித் தமிழர் - எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டம்..!

அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ’புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 

18:42 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: 2011-21 வரையிலான 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் பேசிவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் 11 மாதம் மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கொடுத்தோம். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ. 2, 247 கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். 2011-21 வரையிலான 10 ஆண்டு கால ஆட்சியை பொற்காலம் என மக்கள் கொண்டாடினர்” என தெரிவித்தார். 

18:40 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டது அதிமுக - எடப்பாடி பழனிசாமி

நான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை அதிமுக அரசு காத்தது என மதுரை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். 

18:31 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: கொரோனாவை சிறப்பாக கையாண்டது அதிமுக - எடப்பாடி பழனிசாமி

உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது - எடப்பாடி பழனிசாமி

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget