BREAKING: சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.

Background
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியில் தெரிவித்துள்ளார்
சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!
சிவசங்கர் பாபா விவகாரத்தில், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி. தனிப்படை டேராடூனுக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்னும் அவர் இருக்கும் இடத்தை கண்டறியமுடியவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
சிவசங்கர் பாபா விவகாரம் : ஆசிரியர்கள் பாரதி, தீபா மீது போக்சோ வழக்கு..!
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரியும், பாரதி, தீபா என்ற இரு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.





















