மேலும் அறிய

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

‘‘நான் தர்மம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். தற்போது வரை என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்’’

சீனாவின் உஹான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக இயல்புநிலை திரும்பிய நிலையில் 2021ஆம் ஆண்டின் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பரவல் பலரையும் கடுமையாக பாதித்தது, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் போதாமை உள்ளிட்ட பிரச்னைகள் கொரோனா நோயாளிகளை வாட்டி எடுத்தன. பின்னர் அரசால் போடப்பட்ட பொதுமுடக்கம் அனைவரது வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்தது.  

 

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசிற்கு பொருளாதார உதவி பெரிதும் தேவைப்பட்டது. மேலும் ஒன்றிய அரசு உதவிகளை செய்து வந்தாலும் அது குறிப்பிட்ட அளவிற்கு போதுமானதாக இல்லை. ஆகவே மாநில அரசு கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மக்களிடம் உதவிகளை எதிர்பார்த்து அறிவிப்பை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தொழில்முனைவோர்கள், வசதி படைத்தோர், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த  தொகை வரைக்கும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வாரி வழங்கினர்.

அதற்கு  ஏழை முதல் தொழில் அதிபர் வரை அனைவரும் கொரோனா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கினார்கள். அதே சமயம் பிச்சை எடுத்து திரட்டிய பணத்தை ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு வங்கி மூலம் அனுப்பி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒருவர் .


முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டியன் (70). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கும், வீட்டுக்கும் அனுப்பியது போக மீதம் உள்ள பணத்தை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் பிச்சை எடுக்கும் பணத்தை கொண்டு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் பிச்சை எடுத்தார். தற்போது ஊரடங்கு தளர்வில் கன்னியாகுமரி பகுதியில் பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாய் , 5 ரூபாய் . 10 ரூபாய் என சில்லறைகளை அள்ளி கொண்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தார் .


முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

அங்கு சென்று அதிகாரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுக்க வந்துள்ளேன் என்று கூறவே அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள் . எவ்வளவு தொகை என்று கேட்கவே 10,000 என்று பிச்சைக்காரர் கூறவே அதிகாரிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. அப்போது பிச்சை எடுத்ததின் மூலம் கிடைத்த 10 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த  பாண்டியன் கூறும்போது,

 
‘‘நான் தர்மம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். தற்போது வரை என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு கடைசியாக ரூபாய் 10 ஆயிரத்தை நாகர்கோவிலில் உள்ள வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். இதுவரை கொரோனா நிவாரண நிதிக்கு மட்டும் மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளேன்’’ என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
Embed widget