மேலும் அறிய

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

‘‘நான் தர்மம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். தற்போது வரை என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்’’

சீனாவின் உஹான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக இயல்புநிலை திரும்பிய நிலையில் 2021ஆம் ஆண்டின் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பரவல் பலரையும் கடுமையாக பாதித்தது, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் போதாமை உள்ளிட்ட பிரச்னைகள் கொரோனா நோயாளிகளை வாட்டி எடுத்தன. பின்னர் அரசால் போடப்பட்ட பொதுமுடக்கம் அனைவரது வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்தது.  

 

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசிற்கு பொருளாதார உதவி பெரிதும் தேவைப்பட்டது. மேலும் ஒன்றிய அரசு உதவிகளை செய்து வந்தாலும் அது குறிப்பிட்ட அளவிற்கு போதுமானதாக இல்லை. ஆகவே மாநில அரசு கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மக்களிடம் உதவிகளை எதிர்பார்த்து அறிவிப்பை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தொழில்முனைவோர்கள், வசதி படைத்தோர், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த  தொகை வரைக்கும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வாரி வழங்கினர்.

அதற்கு  ஏழை முதல் தொழில் அதிபர் வரை அனைவரும் கொரோனா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கினார்கள். அதே சமயம் பிச்சை எடுத்து திரட்டிய பணத்தை ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு வங்கி மூலம் அனுப்பி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒருவர் .


முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டியன் (70). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கும், வீட்டுக்கும் அனுப்பியது போக மீதம் உள்ள பணத்தை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் பிச்சை எடுக்கும் பணத்தை கொண்டு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் பிச்சை எடுத்தார். தற்போது ஊரடங்கு தளர்வில் கன்னியாகுமரி பகுதியில் பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாய் , 5 ரூபாய் . 10 ரூபாய் என சில்லறைகளை அள்ளி கொண்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தார் .


முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 4.80 லட்சம் அனுப்பிய பிச்சைக்காரார்...!

அங்கு சென்று அதிகாரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுக்க வந்துள்ளேன் என்று கூறவே அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள் . எவ்வளவு தொகை என்று கேட்கவே 10,000 என்று பிச்சைக்காரர் கூறவே அதிகாரிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. அப்போது பிச்சை எடுத்ததின் மூலம் கிடைத்த 10 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த  பாண்டியன் கூறும்போது,

 
‘‘நான் தர்மம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். தற்போது வரை என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு கடைசியாக ரூபாய் 10 ஆயிரத்தை நாகர்கோவிலில் உள்ள வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். இதுவரை கொரோனா நிவாரண நிதிக்கு மட்டும் மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளேன்’’ என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Embed widget