DMK EV VELU FIR CASE : எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
DMK EV VELU FIR CASE : தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு - லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு, இந்த நிலையில் இன்று காலை திடீரென எ.வ.வேலுக்கு சொந்தான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் சோதனைக்கான காரணங்கள் வெளியாகத நிலையில், தற்போது எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் எ.வ.வேலு மீது பதியப்பட்டுள்ள வழக்கு விவரமானது தற்போது வெளியாகியுள்ளது.
'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 20.04.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து, பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே பொதுப் பணத்தை முறைகேடு செய்திருப்பதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
போடாத சாலைக்கு பணம் ஒதுக்கீடு
அந்த வகையில், திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உட்கோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், கடந்த 2022 ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அதில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் இந்த குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு
அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த வகையில், அரசு அதிகாரிகள் உட்பட 10 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் 'சங்கரானந்த் இன்ஃப்ரா' என 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120B, 409, 420, 468, 471, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















